For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவையில் அரசு பள்ளியின் மேற்கூரை இடிந்தது... அச்சத்தில் மாணவர்கள்

கோவை நீலாம்பூரில் பள்ளிக்கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கோவை: கோவை நீலாம்பூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தததால் மாணவர்கள் அச்சமடைந்தனர்.

கோவை நீலாம்பூரில் உள்ளது சூலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இந்த பள்ளிக்கட்டிடம் கடந்த 2015ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தப்பள்ளிக்கட்டிடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

School roof collapses in Coimbatore

உள்ளூர்வாசிகள் புகார் கூறியது போலவே, பள்ளியின் மேற்கூரையில் இருக்கும் காண்கரீட்கள் ஆங்காங்கே பெயர்ந்து விழுகின்றன. இதனால் மாணவர்கள் அச்சமடைந்தனர்.

பள்ளி மேற்கூரை அவ்வப்போது பெயர்ந்து விழுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் கோவை அருகே சோமனூரில் பஸ் ஸ்டான்ட் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இதேபோல ஒரு சம்பவம் நடந்து மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் முடின் உயிரிழப்பை தடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்க விடுத்துள்ளனர்.

English summary
A Govt school roof collapsed in Nilambur, near Coimbatore. No one was injured.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X