கடைகளை மூடி, பெட்ரோல் போடுவதை நிறுத்தி.. கலாமுக்கு அஞ்சலி செலுத்திய தமிழகம்
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமுக்காக ஒட்டுமொத்தமாக தனது இயக்கத்தை நிறுத்தி இரங்கல் தெரிவித்து அந்த மக்களின் தலைவருக்கு பிரியா விடை கொடுத்தது.

தமிழக வரலாற்றில் முதல் முறையாக அரசியல்வாதி அல்லாத ஒரு மகத்தான தலைவருக்காக நடந்த முதல் முழு அடைப்பு இது என்பதால் அப்துல் கலாம் அதிலும் வரலாறு படைத்துள்ளார்.

தமிழக அரசு இன்று தனது அலுவலகங்களுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்திருந்தது. அதேபோல தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது. சில தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டும் அரசின் உத்தரவைக் காதில் போட்டுக் கொள்ளாமல் தத்தமது வேலையில் ஈடுபட்டிருந்தன. இது ஊழியர்களுக்கு அதிருப்தியைக் கொடுத்தாலும் கூட வேறு வழியி்ல்லாமல் வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது.

காலையில் சிறிது நேரம் பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விற்பனைக்காக மளிகைக் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அதன் பின்னர் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன.
பெட்ரோல் பங்குகள் காலை 10 மணி முதல் 11 மணி வரை செயல்படாமல் மூடி வைக்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் படப்பிடிப்புகள் இன்று நடைபெறவில்லை. அதேபோல தியேட்டர்களிலும் படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.

பொதுமக்கள் ஆங்காங்கு கலாம் படத்தை வைத்து அஞ்சலி செலுத்தியதைக் காண முடிந்தது. வழக்கமாக, அண்ணா, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்களுக்குத்தான் இப்படி தெரு முனைகளில் படம் வைத்து மக்கள் வணங்குவார்கள். காந்திக்குக் கூட இப்படி வைத்து வணங்கியதைக் கண்டதில்லை. ஆனால் கலாம் மறைந்த செய்தி வெளியானது முதல் இன்று உடல் நல்லடக்கம் முடிந்தது வரை தமிழகம் முழுவதும் பொது இடங்களில் அவரது படத்தை வைத்து மக்கள் வணங்கியது உருக்கமாக இருந்தது.

சென்னையில், முக்கிய வணிகப் பகுதிகளான பாரீஸ், புரசைவாக்கம், பர்மா பஜார் உள்பட பல பகுதிகள் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. தமிழகம் முழுவதும் இதே நிலைதான்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications