விரைவில் விடுதலை... அதிகாரிகள் உறுதி... திருச்சி சிறையில் அகதிகள் உண்ணாவிரதம் வாபஸ்
திருச்சி: திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 12 அகதிகளும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் உறுதிமொழி அளித்ததைத் தொடர்ந்து, 5வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த அகதிகள், தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள அகதிகளில் எட்டு பேர், கடந்த புதனன்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். தமது குடும்பங்களுடன் இணைந்து வாழ அனுமதிக்குமாறு கோரி இவர்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

தமிழகத்திற்கு அகதிகளாக வந்த ஈழத் தமிழர்களான இவர்கள் ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட வழக்கிலும்,தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான வழக்கிலும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
எனினும், சிறை வாசலில் வைத்து மீண்டும் கைதுசெய்யப்பட்ட அவர்கள், சிறப்பு முகாம் எனும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனால், குடும்பத்தில் இருந்து தனிமைப்படுத்தி கடந்த சில வருடங்களாக சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக தங்களை நம்பியிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்து ஓராண்டாகியும் தங்கள் மீது வழக்குப் பதியாமல் சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.
அதோடு, பொய் குற்றச்சாட்டின் பேரில் தங்களை கைது செய்து உள்ளதாக போலீசார் மீது அவர்கள் குற்றம் சாட்டினர். ஆகையால் தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கையும் விடுத்தனர். இன்று ஐந்தாவது நாளாக அவர்களது உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தது.
இந்நிலையில், சிறப்பு முகாமில் உள்ள 12 அகதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து அகதிகள் தங்கள் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications