ஒவ்வொரு தமிழனின் இதயத்திலும் ஈட்டியை பாய்ச்சியது போல் வலி: உருகும் டிடிவி.தினகரன்
டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டம் ஒவ்வொரு தமிழனின் இதயத்திலும் ஈட்டியை பாய்ச்சியது போல் இருந்ததாக டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டம் ஒவ்வொரு தமிழனின் இதயத்திலும் ஈட்டியை பாய்ச்சியது போன்ற வலியை ஏற்படுத்தியதாக டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். 28 நாட்களாக தமிழக விவசாயிகள் டெல்லியில் ஜீவ போராட்டம் நடத்தியும் பிரதமர் அவர்களை தொடர்ந்து புறக்கணித்து வருவது வேதனையளிக்கிறது என்றுடம் தினகரன் கூறியுள்ளார்.
டெல்லியில் போராட்டம் நடத்தி வரம் தமிழக விவசாயிகள் இன்று நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
பிரதமரை சந்திக்க வைப்பதாக அழைத்துச்சென்ற டெல்லி போலீஸ் ஏமாற்றியதால் விரக்தியடைந்த விவசாயிகள் பிரதமர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் தங்களின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணப் போராட்டம் நடத்தினர்.
நிர்வாணமாக நமது விவசாயிகள் டெல்லியில் இன்று போராடியது ஒவ்வொரு தமிழனின் இதயத்திலும் ஈட்டியை பாய்ச்சியது போல் வலி ஏற்படுத்துகிறது.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) April 10, 2017
இந்நிலையில் சசிகலாவின் அக்காள் மகனான டிடிவி.தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் விவசாயிகளின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் நிர்வாணமாக நமது விவசாயிகள் டெல்லியில் இன்று போராடியது ஒவ்வொரு தமிழனின் இதயத்திலும் ஈட்டியை பாய்ச்சியது போல் வலி ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி உடனடியாக தமிழக விவசாயிகளை சந்தித்து அவர்களது குறைகளை களைய வேண்டும்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) April 10, 2017
பிரதமர் மோடி உடனடியாக தமிழக விவசாயிகளை சந்தித்து அவர்களது குறைகளை களைய வேண்டும் என்றும் டிடிவி.தினகரன் டிவிட்டர் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.
28 நாட்களாக தமிழக விவசாயிகள் டெல்லியில் ஜீவ போராட்டம் நடத்தியும் பிரதமர் அவர்களை தொடர்ந்து புறக்கணித்து வருவது வேதனையளிக்கிறது.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) April 10, 2017
28 நாட்களாக தமிழக விவசாயிகள் டெல்லியில் ஜீவ போராட்டம் நடத்தியும் பிரதமர் அவர்களை தொடர்ந்து புறக்கணித்து வருவது வேதனையளிக்கிறது என்றும் டிடிவி.தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.