ராணுவத்தை மீட்பு பணிக்கு அனுப்பினாலே போதும்.. கள் இயக்கம் கோரிக்கை
திருச்சி: கஜா புயல் பாதித்த பகுதிகளில் ராணுவம் மூலம் மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளரும், கள் இயக்க ஒருங்கிணைப்பாளருமான நல்லசாமி திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. இன்னும் உள்கிராமங்களில் நிவாரண பொருட்கள் கிடைக்கவில்லை. கஜா புயல் பாதித்த பகுதிகளில் ராணுவம் மூலம் மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். புயல் பாதிப்புகளை பிரதமர் தான் வந்து பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. காலம் தாழ்த்தாமல் உரிய நிதியை ஒதுக்கி ராணுவத்தை மீட்பு பணிக்கு அனுப்பினாலே போதும்.
புயலுக்கு முன் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் திருப்திகரமாக இருந்தது. அதனால் உயிர்ச்சேதம் குறைந்துள்ளது. ஆனால் அதன்பிறகு நிவாரண பணிகளை துரிதப்படுத்தி இருக்க வேண்டும். தற்சமயம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி இருந்தால் அரசின் வேலை பெருமளவு குறைந்து இருக்கும். மக்களின் பிரதிநிதிகள் களத்தில் இருந்து இருப்பார்கள். உள்ளாட்சி தேர்தல் நடத்தாததே மக்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு சேர்க்க முடியாததற்கு காரணம்.
தற்போது கஜா புயலின் கோரத்தாண்டவத்துக்கு பனைமரங்கள் அழிந்தது தான் காரணம். 1947-ம் ஆண்டில் தமிழகத்தில் 50 கோடி பனைமரங்கள் இருந்தன. தற்போது வெறும் 4 கோடி பனை மரங்கள் மட்டுமே உள்ளன. பனைமரங்கள் இருந்து இருந்தால் புயலின் கோரத்தாண்டவத்தை ஓரளவுக்கு கட்டுப்படுத்தி இருக்கும். ஆகவே தமிழக அரசு கள்ளுக்கான தடையை நீக்கினால் விவசாயிகள் பனைமர சாகுபடியை தொடங்கி விடுவார்கள் என்று கூறினார்.
அப்போது காவிரி டெல்டா சங்க தலைவர் தீட்சிதர் பாலு, விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் ஹேமநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications