வேலூர் கணவனுக்கு மாத்திரை குழம்பு ஊற்றிய மோனிஷா.. உடனே வந்த காதலன்! மனைவியின் மாஸ்டர் பிளான் பின்னணி
வேலூர்: வேலூர் அருகே கட்டிட தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.. தனது கணவர் ரத்த வாந்தி எடுத்து இறந்ததாக மனைவி மோனிஷா நாடகமாடிய நிலையில், நள்ளிரவில் சுவர் ஏறி குதித்து வந்த மர்ம நபர்கள் செய்த காரியம் ஊரையே அதிர வைத்துள்ளது.. 2 குழந்தைகள் இருந்தும் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து மோனிஷா தீட்டிய அந்த பயங்கர திட்டம் குறித்த திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
ஆந்திர மாநிலம் குப்பத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (29) என்பவரும், மோனிஷா (23) என்பவரும் 8 வருஷத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர்..

கிருஷ்ணமூர்த்தி பெங்களூருவில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்த நிலையில், மோனிஷா குழந்தைகளுடன் மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் வசித்து வந்தார்..
வேலூர் மோனிஷா
இந்த நிலையில், மோனிஷாவிற்கும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அன்பழகன் (31) என்பவருக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.. இந்த விவகாரம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணமூர்த்திக்கு தெரியவந்தது. இதனால் மனைவிக்கு அறிவுரை செய்தார். ஆனால் மோனிஷா கேட்கவில்லை.
இதனால் பெங்களூருவிலிருந்து வந்து மனைவியை கண்டித்தார்.. அப்போதும் மோனிஷா அந்த தொடர்பை நிறுத்தவில்லை.. இதனால் பெங்களூர் வேலைக்கு செல்ல முடியாமல், அந்த வேலையை விட்டுவிட்டு, வீட்டிலேயே கிடந்தார் கிருஷ்ணமூர்த்தி. போதாக்குறைக்கு மனவருத்தத்தில் குடிப்பழக்கத்துக்கம் ஆளாகி உள்ளார்.
மாத்திரை குழம்பு
வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு, மோனிஷாவுக்கு அட்வைஸ் தந்து, இந்த கள்ளக்காதல் தொடர்பாக தகராறும் செய்து வந்ததாக கூறப்படுகிறது.. இதனால் கடுப்பான மோனிஷா, தன்னை கணவன் அடித்து துன்புறுத்துவதாக கள்ளக்காதலன் அன்பழகனிடம் கூறி அழுது புலம்பியுள்ளார்..
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து, மோனிஷா இதை அன்பழகனிடம் தெரிவித்தார்.. அதனால் ஆத்திரமடைந்த அன்பழகன், அந்த மாலை மேல்பள்ளிப்பட்டு கிராமத்திற்கு தூக்க மாத்திரைகளுடன் வந்தார்.. அவற்றை மோனிஷாவிடம் கொடுத்து, உணவில் கலந்து கணவனுக்கு கொடுத்து தூங்க வைக்கச் சொல்லினார்..

கள்ளக்காதலன் செய்த காரியம்
அதன்படி மோனிஷா இரவு உணவில் தூக்க மாத்திரையை கலந்து கிருஷ்ணமூர்த்திக்கு கொடுத்தார்.. உணவை சாப்பிட்ட கிருஷ்ணமூர்த்தி ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றார்.. கணவன் மயங்கியதை உறுதி செய்த மோனிஷா, உடனே தனது கள்ளக்காதலனுக்கு போன் செய்து வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார்.. பின்னர் அன்பழகன் மற்றும் அவரது நண்பர் சுப்பிரமணி (41) ஆகியோர் சுவர் ஏறி வீட்டுக்குள் நுழைந்து, தூங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியின் கழுத்தை துணியால் இறுக்கி கொலை செய்தனர்..
இந்த நேரத்தில் யாரும் வராதபடி மோனிஷா வீட்டிற்கு வெளியே நின்று கண்காணித்துள்ளார்..கொலை நடந்தது உறுதி செய்யப்பட்டதும், இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.. ஆரம்பத்தில் கிருஷ்ணமூர்த்தி ரத்தவாந்தி எடுத்து இறந்ததாக மோனிஷா கூறினார்.. ஆனால் அவரது தந்தை சந்தேகப்பட்டு போலீசில் புகார் அளித்ததால், வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்..
விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.. இதனை தொடர்ந்து மோனிஷா, கள்ளக்காதலன் அன்பழகன் மற்றும் அவரது நண்பர் சுப்பிரமணி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்..!!
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications