Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனாவால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுறாங்கலாம்.. எச்சரிக்கை விடுக்கும் மருத்துவ நிபுணர்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கொரோனா பாதிப்பு அமெரிக்காவை ஆட்டிப் படைத்து வரும் நிலையில் அங்கு குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் விகிதம் அதிகரித்துள்ளது மருத்துவ நிபுணர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகை கொரோனா ஆட்டிப்படைத்து வரும் நிலையில், அமெரிக்காவில் மட்டும் லட்சக்கணக்கான குழந்தைகள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். உலகம் முழுவதும் கொரோனாவின் கோரதாண்டவம் அதிகரித்து உச்சபட்ச பாதிப்பை ஏற்படுத்தியது. அரசியல், பொருளாதாரம், சுகாதார கட்டமைப்புகளை அசைத்துப் பார்த்த கொரோனா ஓமிக்ரான் எனும் திரிபாக மாறி அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது.

வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக தடுப்பூசியோடு பூஸ்டர் செலுத்தியவர்களுக்கும் கொரோனா மற்றும் ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. நாளுக்குநாள் அதிகரித்து வரும் பாதிப்பு காரணமாக அந்நாட்டில் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பாதிக்கப்படும் குழந்தைகள்

பாதிக்கப்படும் குழந்தைகள்

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக அமெரிக்காவில் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை விகிதம் கணிசமாக அதிகரித்து வருகிறது, ஜனவரி 1 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 100,000 க்கும் மேற்பட்ட 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தொற்றுநோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது முந்தைய வாரத்தில் குறைவாக இருந்தது என்று அமெரிக்க சுகாதாரதுறை வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன

மிக அதிக குழந்தைகள் பாதிப்பு

மிக அதிக குழந்தைகள் பாதிப்பு

டிசம்பர் 4 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 48 சதவீதமாக இருந்த நிலையில், தொற்றுநோய் காரணமாக தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்படும் குழந்தை எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்கு, தடுப்பூசி இன்னும் பெறாதவர்களுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றால் அவர்களை தடுப்பூசி போடப்பட்ட நபர்களாக மாற்ற வேண்டியது மிகவும் முக்கியமானது என மருத்துவ நிபுணர் டாக்டர் ரோசெல் வாலென்ஸ்கி கூறியுள்ளார். CDC மற்றும் அமெரிக்காவின் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையின் தரவுகளின்படி, கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது ஏற்கனவே மிக அதிக அளவில் உள்ளது எனவும், ஒவ்வொரு நாளும் சராசரியாக 797 குழந்தைகள் என்ற இதுவரை இல்லாத வகையில் அதிகபட்ச அளவுஎண்ணிக்கை என கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசி அவசியம்

தடுப்பூசி அவசியம்

அமெரிக்காவில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான சிறந்த வழி அவர்களுக்கு தடுப்பூசி போடுவது உடன்பிறந்தவர்கள் மற்றும் ஆர்வத்துடன் தடுப்பூசி போடப்பட்ட பெற்றோர்களை கொண்டிருப்பதும் தான் என கூறும் வாலென்ஸ்கி, சமீபத்திய தகவல்களின்படி கொரோனா தொற்று நோயின் காரணமாக தற்போது 82 ஆயிரம் குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இது கடந்த ஆண்டுகளில் இல்லாத எண்ணிக்கை எனவும் கூறினார்.

Recommended Video

    Cyprus நாட்டில் பரவும் புதிய Variant Coronavirus.. Deltacron குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன?
    புதிய பரிந்துரைகள்

    புதிய பரிந்துரைகள்

    பள்ளிகளில் புதிய கொரோனா தனிமைப்படுத்தல் மற்றும் கட்டுப்பாடுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் குறைந்தது ஐந்து நாட்களுக்கு வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும் அவர்கள் மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அறிகுறிகள் இல்லாத அல்லது மிகக் குறைந்த அறிகுறிகள் உள்ள நபர்களுக்கு கொரோனா பரிசோதனை உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், இருபத்தி நான்கு மணி நேரம் காய்ச்சல் இல்லாமல் இருந்தால் ஐந்து நாட்கள் முழுமையாக தனிமைப்படுத்தப் படலாம் என கூறப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+