இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட 25% வரி 18%ஆக குறைப்பு.. பிரதமர் மோடியுடன் பேசிய பிறகு டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.இந்தியா-அமெரிக்கா உறவின் பலம் குறித்து இருநாட்டு தலைவர்களும் பேசினர். இந்த உரையாடலில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் இன்று சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று காலை இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாடியது எனக்கு ஒரு பெருமை. அவர் எனது சிறந்த நண்பர்களில் ஒருவர், மேலும் தனது நாட்டின் சக்திவாய்ந்த மற்றும் மதிக்கப்படும் தலைவர். வர்த்தகம் மற்றும் ரஷ்யா- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது உட்பட பல விஷயங்களைப் பற்றி நாங்கள் பேசினோம். அவர் ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்திவிட்டு, அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிலிருந்து அதிக அளவில் வாங்க ஒப்புக்கொண்டார்.
ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துகொண்டிருக்கும், தற்போது நடந்துகொண்டிருக்கும் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர இது உதவும்! பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதை காரணமாகவும், அவரது கோரிக்கையின்படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
இதன் மூலம் அமெரிக்கா பரஸ்பர வரியைக் குறைத்து, 25% இலிருந்து 18% ஆகக் குறைக்கும். அதேபோல், அவர்களும் அமெரிக்காவிற்கு எதிரான தங்கள் வரிகள் மற்றும் வரியல்லாத தடைகளை பூஜ்ஜியமாகக் குறைக்க நடவடிக்கை எடுப்பார்கள். பிரதமர் மோடி 500 பில்லியன் டாலருக்கும் அதிகமான அமெரிக்க எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல தயாரிப்புகளுக்கு மேலதிகமாக, "அமெரிக்கப் பொருட்களை வாங்குவதாகவும்" உறுதியளித்தார்.
இந்தியா உடனான நமது அற்புதமான உறவு இனிவரும் காலங்களில் இன்னும் வலுப்பெறும். பிரதமர் மோடியும் நானும் காரியங்களைச் சாதிக்கும் இருவர், இது பெரும்பாலானோரால் செய்ய முடியாத ஒன்று. இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி!" எனத் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது?












Click it and Unblock the Notifications