பிரபல இசையமைப்பாளர் மகனுக்கே இந்த நிலையா? நடிகர் ஸ்ரீகுமார் உடைக்கும் கசப்பான சாதி அரசியல்!
தமிழ் திரையுலகில் 'மெல்லிசை மன்னர்கள்' என்று போற்றப்படுபவர்கள் சங்கர் - கணேஷ் ஜோடி. ஆயிரக்கணக்கான பாடல்கள், நூற்றுக்கணக்கான படங்கள் எனத் தசாப்தங்களாகத் திரையுலகை ஆண்ட சங்கர் அவர்களின் மகன் தான் நடிகர் ஸ்ரீகுமார். வாரிசு நடிகர், வசதியான பின்னணி எனப் பலரும் இவரைப் பார்த்தாலும், இவருக்குப் பின்னால் இருக்கும் குடும்ப வரலாறு ரத்தமும் கண்ணீரும் கலந்தது என்பதை சமீபத்திய நேர்காணலில் போட்டுடைத்துள்ளார் ஸ்ரீகுமார்.

பணம் இருந்தால் சாதி ஓடிவிடும்
சமூகத்தில் நிலவும் சாதியப் பாகுபாடுகள் குறித்துப் பேசும் ஸ்ரீகுமார், ஒரு கசப்பான உண்மையை மிகத் துணிச்சலாகப் பதிவு செய்துள்ளார். "இந்தச் சமூகத்தில் சாதி என்பது ஏழைகளுக்கானது மட்டுமே. நீங்கள் ஏழையாக இருக்கும் வரைதான் உங்கள் சாதியைத் தேடிப் பிடித்து உங்களை ஒடுக்குவார்கள். ஆனால், நீங்கள் கஷ்டப்பட்டு முன்னேறிப் பணக்காரராகிவிட்டால், அந்தச் சாதி அடையாளம் தானாகவே மறைந்துவிடும். யாரும் உங்களைச் சாதியைக் கேட்டுப் புறக்கணிக்க மாட்டார்கள்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
தந்தை சங்கர் சந்தித்த கொடூரங்கள்
இன்று ஸ்ரீகுமார் ஒரு நட்சத்திரமாக வலம் வருவதற்கு விதை போட்டவர் அவரது தந்தை சங்கர். ஆனால், அவர் சந்தித்த அவமானங்கள் சொல்லொணாதவை. "என் அப்பா பட்டியல் இனத்தைச் (SC) சேர்ந்தவர் என்பதால், அந்த காலத்தில் அவர் கடும் பாரபட்சத்தை எதிர்கொண்டார். அவர் ஒரு திறமையான இசையமைப்பாளராக வளர்ந்து வந்த சமயத்தில் கூட, அவருக்கு ஈயத் தட்டில் தான் உணவு வழங்கப்பட்டது. இத்தனைக்கும் அவர் ஒரு கலைஞன், சாதிக்கத் துடித்த ஒரு மனிதர். ஆனால், அந்தத் தட்டு தான் அன்று அவருக்குச் சமூகத்தின் அடையாளமாகக் கொடுக்கப்பட்டது", என்று ஸ்ரீகுமார் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

அடையாளங்களைத் தாண்டிய போராட்டம்
தந்தையின் அந்த வலிகள்தான் ஸ்ரீகுமாரை இன்று ஒரு பக்குவப்பட்ட மனிதராகச் செதுக்கியுள்ளது. 'ஆனந்தம்' சீரியல் மூலம் அறிமுகமாகி, 'யாரடி நீ மோகினி', 'வானத்தை போல' எனத் தொடர்ந்து ஹிட் சீரியல்களைக் கொடுத்தவர். தற்போது ஜீ தமிழில் 'கெட்டி மேளம்' தொடரில் நாயகனாகத் தன் பயணத்தைத் தொடர்கிறார். "வெற்றி பெற்றால் சாதி மறைந்துவிடும்" என்ற ஸ்ரீகுமாரின் கருத்து, சமூகம் இன்னும் பணத்தையும் அதிகாரத்தையும் வைத்தே ஒரு மனிதனை மதிக்கிறது என்பதைக் காட்டும் கண்ணாடி போல அமைந்துள்ளது. இந்த 'ஓபன் டாக்' தற்போது சின்னத்திரை வட்டாரத்திலும், இணையத்திலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications