ஈஸ்வரியிடம் எழிலை போட்டுக் கொடுத்த வர்ஷினி..குடும்பத்திற்கு தெரிந்த உண்மை..கோபியின் திடீர் மனமாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் எழில் ஆபீஸில் நடந்த விஷயங்களை வர்ஷினி, ஈஸ்வரியிடம் போட்டு கொடுத்து இருக்கிறார்.

எழில் படம் பாதியிலே முடிவடைந்த நிலையில் கோபி திடீர் மனமாற்றம் அடைந்திருக்கிறார்.

பாக்கியா சமையல் செய்யும் இடத்தில் பெண்களால் பாக்யாவுக்கு புது பிரச்சனை ஏற்படுகிறது.

பாக்கியாவுக்கு வரும் புது பிரச்சனை

பாக்கியாவுக்கு வரும் புது பிரச்சனை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் பாக்யா மூன்று மணி ஆகிவிட்டதால் இனி சாப்பாடுக்காக யாரும் வரவே மாட்டார்கள் எடுத்து வைத்து விடலாம் என்று பேசிக்கொண்டிருக்க அங்கே அதுவரைக்கும் இருந்த செல்வி திடீரென மாயமாகி தனியாக போய் தூங்கிக் கொண்டிருக்கிறார். செல்வியை திட்டி எழுப்பிக்கொண்டிருக்கும்போது, அந்த ஏரியா செக்ரட்டரி உட்பட சில பெண்கள் வந்து புதுசா சாப்பாடு விக்கிறீங்க. இதெல்லாம் இங்கே பண்ணகூடாது என்று சண்டை இடுகின்றனர். அதற்கு செல்வியும் பதிலடி கொடுப்பதால் நாங்கள் உங்களுக்கு வீடு வாடகைக்கு தந்தவர்களிடம் பேசிக் கொள்கிறோம் என்று அவர்கள் அங்கிருந்து கோபத்தோடு கிளம்புகின்றனர்.

ஈஸ்வரிக்கு தெரிந்த உண்மை

ஈஸ்வரிக்கு தெரிந்த உண்மை

அடுத்ததாக ஈஸ்வரி ரூமுக்குள் இருந்து கோபமாக வெளியே வந்து முறைத்துக் கொண்டு இருக்க, ராமமூர்த்தி என்ன ஆனது ஏன் முகம் மாதிரியாக இருக்கிறது என விசாரித்துக் கொண்டிருக்கிறார். அப்போது எழிலும் வீட்டிற்கு சோகமாக வர எழில் இடம் விசாரித்து கொண்டிருக்கின்றனர். அப்போது கோபமாக ஈஸ்வரி எழிலுக்கு வேலை போன விஷயத்தையும் அங்கே நடந்த பிரச்சனைகளையும் கூற எழில் மீது கோபத்தை காட்டுகிறார். பாக்யா என்னதான் ஆச்சு என கேட்க நீ கொடுக்கிற செல்லம் தான் என பாக்யாவை திட்டிக்கொண்டு உள்ளே செல்கிறார்.

கோபிக்கு தெரிய வந்த உண்மை

கோபிக்கு தெரிய வந்த உண்மை

பிறகு எழில் பாக்கியாவிடம் நடந்த விஷயத்தை கூறுகிறார். நான் எல்லாத்தையும் விட்டு மேலே ஏறி வருவேன். நீ என் கூட இருந்தா மட்டும் போதும் என கூறுகிறார். அடுத்ததாக ராதிகா வீட்டிற்கு வரும் விஷயத்தை சொல்ல கோபி கோபப்படுகிறார். எழில் ஆபீஸில் என்ன பிரச்சனை என்று ராமமூர்த்தி இடம் கேட்க எனக்கு அதுவெல்லாம் தெரியாது. ஆனால் எழிலுடைய படத்தில் இருந்து அவனை நிறுத்தி விட்டார்கள். அது மட்டும் தான் எனக்கு தெரியும் என ராமமூர்த்தி கூறுகிறார். பின்பு நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கோபி பேச இதில் நீ ஒன்றும் செய்ய முடியாது அது அவனே பார்த்துக் கொள்வான் என்று ராமமூர்த்தி கூறுகிறார்.

கோபிக்கு எழிலின் பதிலடி

கோபிக்கு எழிலின் பதிலடி

அடுத்தது எழில் ஒரு இடத்தில் நின்று கொண்டு டீ குடித்துக் கொண்டிருக்க அங்கு வரும் கோபி எழிலை பார்த்து நடந்த விஷயத்தை பேசி எதுக்கு தேவையில்லாம சண்டையிட்டு இப்படியே லைப் கெடுத்துக்குற ஆரம்பத்தில் ஒரு திரைப்படத்தில் வெற்றி பெற வேண்டும் என்பது எளிதான விஷயம் அல்ல நீ அதை செய்திருந்தாய், அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் உன் கோபத்தால் உன்னுடைய வாழ்க்கையை கெடுத்து விடாதே என்று கோபி அட்வைஸ் கொடுத்து கொண்டிருக்கும் போது, பிடிச்ச ஒரு விஷயத்துக்காக பிடிவாதமாய் இருக்கிறது தப்பு கிடையாது. ஒருத்தருக்கு நம்பிக்கை கொடுத்துட்டு அதை கெடுக்கிறது ரொம்ப தப்பு என்னுடைய கோபத்துக்கு பின்னாடி ஒரு நியாயம் இருக்கு என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+