மாற்றப்பட்ட பிக்பாஸ் ரூல்ஸ்... காரணம்.. இதுதான் முடிவா??

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி 5 வது சீசனில் இதுவரைக்கும் இல்லாத வகையில் பல திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளது.

இதுவரைக்கும் இல்லாததை இந்த சீசனில் பார்த்ததும் ரசிகர்கள் ஒருபக்கமாக குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

புதுமையான பல செயல்கள்

புதுமையான பல செயல்கள்

பிக்பாஸ் 5வது சீசன் முடிவடைய ஒரு நாளே இருக்கும் நிலையில இந்த சீசனில் ஆரம்பத்திலிருந்து பல செயல்கள் புதுமையானதாக செய்து வரும் பிக் பாஸை பார்த்து ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கழுவி ஊற்றி வருகின்றனர். இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த முறை வித்தியாசத்தை செய்ய போகிறோம் என பிக்பாஸ் விதவிதமான பல வேலைகளை பார்த்து வருகிறது என்று பலர் குற்றம் சாட்டிக் கொண்டு வருகிறார்கள்.

ரசிகர்களின் பலதரப்பட்ட கருத்து

ரசிகர்களின் பலதரப்பட்ட கருத்து

சில ரசிகர்கள் இப்படித்தான் ஒவ்வொரு சீசனிலும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இது வெளியே தெரியாமல் இருந்தது தற்போதைய சீசனில் அனைத்தும் வெட்டவெளிச்சமாக மாட்டிவிட்டது என்று விளக்கம் கொடுத்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பல நிகழ்வுகளையும் எடுத்துக்காட்டாக கூறி வருகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் அப்படி எந்த விஷயமும் இங்கே மாற்றமாக நடக்கவில்லை என்று பிக் பாஸுக்கு ஆதரவு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். சமூக வலைத்தளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி தற்போது கருத்துப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பிரியங்காவிற்கு கொடுக்கப்பட்ட சலுகை

பிரியங்காவிற்கு கொடுக்கப்பட்ட சலுகை

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு ரியாலிட்டி ஷோ வாக இருப்பதால் இதைப் பார்ப்பதற்காக நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி 100 நாட்கள் ஒளிபரப்பப்படும் என்று கூறி வந்த நிலையில் தற்போது 106 நாட்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த போட்டியில் இருக்கும் போட்டியாளர்கள் 100 நாட்கள் உள்ளே தான் இருக்க வேண்டும் என்று விதி இருக்கும் நேரத்தில் பிரியங்கா தற்போது வெளியே அனுப்பப்பட்டு இருக்கிறார். ஆனால் கடைசி நாளான கிராண்ட் பினாலேவில் நேரடியாக கலந்து கொள்ளலாம் என்று பிக்பாஸ் அறிவுறுத்தி இருக்கிறது. இது பலதரப்பட்ட ரசிகர்களின் கருத்துக்களை பெற்று வருகிறது.

ஒருவேளை இருக்குமோ

ஒருவேளை இருக்குமோ

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த தாமரைச்செல்வி தான் உள்ளே இருக்கும் போது மருத்துவமனைக்கு வெளியே சென்று விட்டு வந்ததாக கூறி இருந்தார். இதுவே சமூக வலைத்தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தற்போது நேரடியாக பிரியங்காவை வெளியே அனுப்பி இருப்பது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் எப்போதும் போல இந்த கிராண்ட் ஃபினாலே லைவ் நிகழ்ச்சியாக நடைபெறவில்லை என்ற செய்திகளும் தற்போது வெளியாகியுள்ளது. சனிக்கிழமை அன்று கிராண்ட் பினாலே நிகழ்ச்சியை நடத்தி அதை ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்புவதாக செய்திகள் பரவி வருகிறது. இந்த மாதிரி புதிய விதிகள் பிக் பாஸ் செய்வதை பார்க்கும் போது ஏற்கனவே விஜய் டிவி செலக்ட் பண்ணி வைத்திருக்கும் போட்டியாளருக்கு பரிசை கொடுப்பதற்காகத்தான் இப்படி செய்கிறார்களா??என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+