பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடரும் முத்தக் காட்சிகள்...போன வாரம் அமீர், இந்த வாரம் அக்ஷரா
சென்னை: பிக்பாஸ் ஐந்தாவது சீசன் தற்போது சர்ச்சைகளுக்கு மத்தியில் சிக்கி உள்ளது.
முதல் சீசனில் தொடங்கிய மருத்துவ முத்தம் தற்போது ஐந்தாவது சீசனில் வைரலாகி வருகிறதா??என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
போன வாரம் அமீர் செய்ததற்கு கொந்தளித்த ரசிகர்கள் இந்த வாரம் அக்ஷராவின் செயலுக்கும் கலாய்த்து வருகின்றனர்.

முகம் சுளிக்கும் ரசிகர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு பிரச்சனை பூதாகரமாக வெடித்து ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது. அதே மாதிரிதான் தற்போதைய சீசனிலும் கூட முத்தக் காட்சிகள் இடம் பிடித்து அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பார்க்கும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடப்பதை பார்த்து பலர் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அட இப்படி இறங்கிவிட்டார்களா??டிஆர்பி கூட்டுவதற்காக இப்படி செய்கிறார்களா??அல்லது நிஜமாகவே இப்படி மாறிவிட்டார்களா??என்று ரசிகர்களுக்கு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளனதாம்.

அமீர் உடைய விளையாட்டு
தற்போது ஒரு சில வாரங்களாக பாவனி மற்றும் அபிநய் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணங்களால் பிக்பாஸ் வீட்டிற்குள் மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் ரசிகர்கள் மத்தியிலும் பல்வேறு கருத்துக்கள் தோன்றிக்கொண்டே இருக்கிறது. இதில் பாவனி மீது தவறா அல்லது அபிநய் மீது தவறா என்று பலர் தங்களுடைய கருத்துக்களை கூறி கொண்டிருக்கும்போது வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வந்து இறங்கிய அமீர் செய்யும் செயல்கள் ஒரு சிலருக்கு காண்டாக இருக்கிறது என்று கூறி வருகின்றனர். ஆனால் ஒரு சில ரசிகர்கள் அமீர் விளையாட்டை விளையாடுகிறார் அவ்வளவுதான் என்று அவருக்கு சப்போர்ட் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

அமீரின் திடீர் செயல்
கடந்த வாரத்தில் நாமினேஷனில் இருந்த பாவனி தான் எப்படியும் இந்த வீட்டை விட்டு வெளியேறி விடுவேன் இந்த வாரம் என்று நம்பிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவருக்கு ஆறுதல் கொடுக்கும் விதமாக பேசிக்கொண்டிருந்த அமீர் திடீரென்று அவருடைய காதில் ஏதோ சொல்வது போல பேசிவிட்டு திடீரென்று அவர் கன்னத்தில் முத்தம் கொடுத்ததை அப்படியே எபிசோடில் பிக்பாஸ் ஒளிபரப்பி விட்டது. இதை பார்த்து பலர் காண்டாகி மீம்ஸ்கள் அதிகமாக சமூக வலைத்தளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

இந்த செயல் சரியா?? தவறா??
அமீர் செய்தது சரியா??தவறா??என்று பட்டிமன்றம் அடங்குவதற்குள் நேற்றைய எபிசோடில் அக்ஷரா, வருண் கன்னத்தில் முத்தம் கொடுத்தது பார்த்து நெட்டிசன்கள் காண்டாகி கலாய்த்து வருகின்றனர். என்னடா நடக்குது இந்த பிக்பாஸ் வீட்டுக்குள், போன வாரம் அமீர் செய்தது தப்பு என்று சொன்னவர்கள் இந்த வாரம் அக்ஷரா செய்வது சரியா என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ஆனால் நாமினேஷனில் பாவனி மற்றும் அமீரைப் பற்றி பேசியது சரியா, தவறா என்றும் பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே அக்ஷரா, வருணிடம் நடந்து கொள்வது மட்டும் சரியா என்றும் பாவனியைப் பற்றி அவர் தவறாக பேசி வருகிறார் என்றும் பாவனியின் ரசிகர்கள் அக்ஷராவை கலாய்த்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி என்ன இந்த மாதிரி போய்க்கொண்டிருக்கிறது என்று பலர் மீம்ஸ்களை பறக்கவிட்டு கலாய்த்து தள்ளி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications