கொரோனாவை குணப்படுத்துவதில் சக்சஸ்.. தமிழகத்தில் நடைமுறைக்கு வருகிறது பிளாஸ்மா சிகிச்சை- விஜயபாஸ்கர்
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
2 கோடி ரூபாய் செலவில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி அமைக்கப்பட உள்ளது. இது இந்தியாவிலேயே டெல்லிக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப்பெரிய பிளாஸ்மா வங்கியாகும்.
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

பரிசோதனை வெற்றி
சென்னையில் சோதனை முறையில் பிளாஸ்மா சிகிச்சை அளித்ததில் 18 நோயாளிகள் குணமடைந்தனர். எனவே இந்த சிகிச்சையை பரவலாக்குவதற்கு முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார். பிளாஸ்மா தானம் செய்வோர் 18 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.

யார் யாரெல்லாம் பிளாஸ்மா தானம் செய்யலாம்
உயர் ரத்த அழுத்தம், இதய நோய், சர்க்கரை நோய், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் போன்றோர் பிளாஸ்மா தானம் செய்யக்கூடாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை வழங்கி ஒரு நோயாளி குணம் அடைந்து இருக்கிறார். எனவே, திருநெல்வேலி அரசு மருத்துவமனையிலும் பிளாஸ்மா சிகிச்சை சோதனை விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது. நெல்லை, கோவை, ஸ்டான்லி, ஓமந்தூரார் உட்பட பல அரசு மருத்துவமனைகளில் பிளாஸ்மா தானம் செய்வோர் செய்யலாம்.

எதிர்ப்பு சக்தி
கொரோனா நோயிலிருந்து மீண்டவர்களின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மா பிரித்தெடுக்கப்பட்டு அது நோயாளிகளுக்கு வழங்கப்படுவதன் மூலம் நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தி பெற்று குணமடைகிறார்கள். குணமடைந்த பிறகு 14 நாட்கள் கழித்து ஒருவர் பிளாஸ்மா தானமளிக்க தகுதியுடையவர் ஆவார்.

வெற்றிகரமான சிகிச்சை
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை நேரடியாக எந்த ஒரு மருந்தும் இல்லாத நிலையில், பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலன் அளிப்பதை டெல்லியில் உணர்ந்துள்ளனர். இந்த நிலையில்தான் சென்னையில் முதலில் பரிசோதனை முறையில் பிளாஸ்மா சிகிச்சை செய்யப்பட்டது. அதில் வெற்றி கிடைத்துள்ளது. டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டு, வென்டிலேட்டர் சிகிச்சை வரை சென்ற நிலையிலும், பிளாஸ்மா சிகிச்சையால் குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications