Parasakthi: பராசக்தி பார்க்க தியேட்டருக்கு போன சிவகார்த்திகேயன்.. வாசலில் செய்தியாளர்கள் முன்பு சொன்ன விஷயம்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த படம், இன்று காலை 6 மணிக்கு கேரளாவில் முதலில் திரையிடப்பட்ட நிலையில், காலை 9 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. படம் வெளியான உடனே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும், கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
படத்தின் முதல் நாள் வரவேற்பை நேரில் தெரிந்து கொள்ளும் வகையில், சிவகார்த்திகேயன் சென்னை சத்தியம் திரையரங்கிற்கு நேரடியாக சென்றார். அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "காலையிலிருந்து நல்ல ரிவ்யூக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

மதுரையில் இருந்து ஒரு ரசிகர் அனுப்பிய மெசேஜை நான் இப்போதுதான் பார்த்தேன். 'இது அமரனை விட பெட்டர்' என்று மூன்று ஹார்ட் எமோஜியுடன் அனுப்பியிருந்தார். அது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது" என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
மேலும் அவர் பேசுகையில், "ஒவ்வொரு நடிகரும் நடிக்கும்போது, இந்த இடத்தில் ரசிகர்கள் ரசிப்பார்கள், இந்த காட்சி அவர்களுக்கு பிடிக்கும் என்ற எண்ணத்துடன்தான் நடிக்கிறோம். அதே மாதிரிதான் இந்த பராசக்தி படத்தையும் உருவாக்கியிருக்கிறோம். இது நம்முடைய தமிழ் பற்று, நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக இருப்பதால், ரசிகர்களை இன்னும் அதிகமாக கனெக்ட் செய்யும் என்று நம்புகிறேன். மக்கள் இந்த படத்தை கண்டிப்பாக சப்போர்ட் செய்வார்கள்" என்று கூறினார்.
தொடர்ந்து, ரசிகர்களுடன் சேர்ந்து படத்தை பார்க்க போவதாகவும், அவர்களை எண்டர்டெயின் செய்ய முடிந்தது தான் தன்னுடைய மிகப்பெரிய சந்தோஷம் என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்தார். அவரது இந்த பேச்சு, ரசிகர்களிடையே மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், பராசக்தி படத்தை பார்ப்பதற்காக சிவகார்த்திகேயனின் மனைவி மற்றும் மகள் இருவரும் காலை முதல் காட்சிக்கே தனியாக வந்திருந்தனர் என்பதும் ரசிகர்களிடையே கவனம் பெற்ற விஷயமாக மாறியுள்ளது. குடும்பத்தினரே முதல் நாள் முதல் காட்சியில் படம் பார்த்தது, படத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மொத்தத்தில், சமூக உணர்வும், தமிழ் அடையாளமும் பேசும் பராசக்தி திரைப்படம், ரசிகர்களிடையே விவாதங்களையும், பாராட்டுகளையும் ஒருசேர பெற்று வருகிறது. முதல் நாள் ரிலீஸ் முடிந்ததும், இந்த படம் வருங்கால நாட்களில் இன்னும் வலுவான வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications