ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்.. கரம்பிடித்த மருத்துவ பணியாளர்.. ஒடிசாவில் ஸ்வீட் காதலர் தினம்
ஒடிசாவில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் நடந்து இருக்கிறது.
Recommended Video

புபனேஷ்வர்: ஒடிசாவில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் நடந்து இருக்கிறது. பிரமோதினி ரவுல் என்ற அந்தப் பெண்ணை காதலித்த சரோஜ் சாஹு என்ற நபர் கரம் பிடித்து இருக்கிறார்.
இவர்கள் காதல் கதை இதயத்தை உருக்கும் வகையில் இருக்கிறது. இந்தப் பெண் கடந்த ஏப்ரல் 18, 2009 அன்று ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டார்.
தற்போது அந்தக் குற்றவாளிக்கு தண்டனைக் கிடைத்து இருக்கிறது. பிரமோதினிக்கு இன்னும் பார்வையில் பிரச்சனை இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடந்தது என்ன
பிரமோதினி ரவுல் 16 வயது இருக்கும் போது, ஏப்ரல் 18, 2009 அன்று ஆசிட் வீச்சால் தாக்கப்பட்டார். இவரை ஒருதலையாக காதலித்த சந்தோஷ் என்பவர் பிரமோதினி மீது ஆசிட் வீசினார். சந்தோஷ் பாராமிலிட்டரி படையில் வேலை பார்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிகிச்சை
இவர் முகம் முழுக்க இதனால் பாதிக்கப்பட்டது. அதேபோல் பார்வையும் 50 சதவிகிதம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இவர் முதலில் கட்டாக்கில் கண்ணுக்குச் சிகிச்சை எடுத்தும் சரியாகாமல் இருந்துள்ளது. இப்போது அடுத்த அறுவை சிகிச்சை செய்து ஒரு கண் மூலம் மட்டும் பார்க்கும் திறனைப் பெற்று இருக்கிறார்.

காதல் மலர்ந்தது
இரண்டாவது முறையாகச் சிகிச்சை எடுத்துக் கொண்ட போது அந்த மருத்துவமனைக்கு சரோஜ் சாஹு என்ற நபர் வந்து சென்றுள்ளார். அங்கு மருந்து விற்பனை செய்ய அவர் அடிக்கடி வந்துள்ளார். அப்போது பிரமோதினியை பார்த்துக் காதலில் விழுந்துள்ளார். அப்போதே அவரிடம் காதலையும் சொல்லி இருக்கிறார்.

சேர்ந்தனர்
பிரமோதினி சில நாட்கள் கழித்து காதலை ஒப்புக் கொண்டு இருக்கிறார். இவர் காதல் சொல்வார் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை என்று பிரமோதினி பேட்டி அளித்துள்ளார். அவர் வந்த பின் வாழ்க்கையே மாறிவிட்டது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

நிச்சயதார்த்தம்
தற்போது இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது. காதலர் தினம் அன்று நிச்சயம் செய்ய வேண்டும் என்று பொறுத்திருந்து விழாவை நடத்தி இருக்கிறார்கள். பிரமோதினி வேலை பார்க்கும் 'ஷெரோஸ் ஹேங்கவுட் கஃபேவில்' இந்த விழா நடந்துள்ளது. அங்கு இன்னும் பல ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications