Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகை திவ்யா பெற்றோர் பற்றி வெளியிட்ட உருக்கமான பதிவு.. இப்பவாவது புரிந்ததே! ஆறுதல் கூறும் பிரபலங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரை நடிகையான திவ்யா ஸ்ரீதர் தன்னுடைய பெற்றோர் குறித்து உருக்கமாக வெளியிட்ட பதிவுக்கு ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

கணவனோடு ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மன அழுத்தத்தில் இருந்து வந்த திவ்யா ஸ்ரீதர் அவருடைய பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டது ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றிருக்கின்றது.

பரபரப்பை ஏற்படுத்திய குடும்ப பிரச்சனை

பரபரப்பை ஏற்படுத்திய குடும்ப பிரச்சனை

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் திவ்யா ஸ்ரீதர் தற்போது சமூக வலைத்தளத்தில் பலருக்கும் பரீட்சயமான ஒரு நபராக மாறிவிட்டார். இவர் ஒரு சின்னத்திரை நடிகையாக இதுவரைக்கும் பலருக்கும் தெரிந்திருந்த நிலையில் தற்போது இவருடைய குடும்பப் பிரச்சனை சமூக வலைத்தளத்தில் அனைவருக்கும் தெரிந்த ஒரு பிரச்சினையாக மாறிவிட்டது. இவர் சின்னத்திரை நடிகர் ஆன அர்ணவ் என்பவரை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

செல்லம்மா சீரியல் கதாநாயகன்

செல்லம்மா சீரியல் கதாநாயகன்

நடிகை திவ்யா ஸ்ரீதரின் கணவரான அர்ணவ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஐந்து ஆண்டுகள் காதலித்து தற்போது ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் இவர்கள் திருமணம் செய்திருக்கின்றனர் திருமணத்திற்கு பிறகு அர்ணவ் செல்லம்மா சீரியல் கதாநாயகி உடன் நெருங்கி பழகி வருவது திவ்யாவிற்கு பிடிக்காமல் இவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு இருக்கிறது. தற்போது திவ்யா கர்ப்பமாக இருக்கும் நிலையில் அர்ணவ் இவரை அடித்து துன்புறுத்தியதாக இவர் கூறியிருந்தார்.

ஆதரவு இல்லாமல் தவிப்பு

ஆதரவு இல்லாமல் தவிப்பு

அருணாவின் மீது அதிகளவில் காதல் வைத்திருக்கும் திவ்யாவால் அவருடைய கணவர் வேறு ஒருவருடன் நெருங்கி பழகுவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் இவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையின் காரணமாக திவ்யா அர்ணவ் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்தார். இந்த நிலையில் தற்போது அர்ணவ் கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்துள்ளார். இந்த நிலையில் தனக்கு யாருமே ஆதரவு இல்லை என்று திவ்யா சமூக வலைத்தளத்தில் பேசிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் அனுதாபத்தை பெற்றிருந்தது.

பெற்றோர் குறித்த பதிவு

பெற்றோர் குறித்த பதிவு

திவ்யா கர்ப்பமாக இருக்கும் நிலையில் யாரும் இல்லாமல் தனியாகவே குடும்பத்தை சமாளித்துக் கொண்டிருந்திருக்கிறார் .இந்த நிலையில் அவருடைய அம்மா மற்றும் அப்பா அவரை புரிந்து கொண்டு இப்போது சேர்த்து இருக்கிறார்களாம். அதனைக் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவு ஒன்றே வெளியிட்டு இருக்கிறார். அதில் ,பெற்றோர்கள் வாழும் தெய்வங்கள் அவர்கள் தங்கள் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக எல்லாவற்றையும் செய்கிறார்கள். பதிலுக்கு எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார் .அதற்கு சின்னத்திரை நடிகையான கிருத்திகா அண்ணாமலை, ஆம் அன்பே மிகவும் உண்மை இப்போது உங்களுக்கு மகிழ்ச்சி என்று கூறி இருக்கிறார். அதுபோல சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இந்த பதிவை பார்த்ததில் மகிழ்ச்சி ,இனி வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று இவருக்கு அன்பு அறிவுரைகளை கூறி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+