Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு காலத்தில் பாஜகவிற்கு ஹீரோ.. ஒரே நாளில் வில்லன்.. பொன்னாரை தடுத்த ஐபிஎஸ் யார் தெரியுமா?

நேற்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் வாக்குவாதம் செய்த போலீஸ் அதிகாரி இணையம் முழுக்க அதிக அளவில் தேடப்பட்டு உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பொன்.ராதாகிருஷ்ணனை நிறுத்திய கேரளா எஸ்.பி. யார் தெரியுமா ?- வீடியோ

    திருவனந்தபுரம்: நேற்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் வாக்குவாதம் செய்த போலீஸ் அதிகாரி இணையம் முழுக்க அதிக அளவில் தேடப்பட்டு உள்ளார். இவர் யார் என்று பலர் தேடி இருக்கிறார்கள்.

    நேற்று சபரிமலை சென்ற பாஜக கட்சியை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டார். அமைச்சரை தடுத்திய நிறுத்திய போலீஸ் அதிகாரி இந்தியா முழுக்க வைரலாகி உள்ளார்.

    யதீஷ் சந்திரா ஐபிஎஸ்தான் இப்படி வைரலானது. இவரது துணிச்சலான நடவடிக்கை காரணமாக நிறைய சிக்கலுக்கு ஆளாகி இருக்கிறார். இவர் பலமுறை, பல கட்சிகளை எதிர்த்து நின்று உள்ளார். இவரது சர்ச்சை வரலாறு மிக நீண்டது.

    லத்தி சார்ஜ்

    லத்தி சார்ஜ்

    கர்நாடகாவில் பிறந்து கேரளாவில் எஸ்.பியாக நியமிக்கப்பட்டு இருக்கும் யதீஷ் சந்திரா ஐபிஎஸ் முதலில் வைரல் ஆனது கேரளாவின் அங்கமாலி பகுதியில் 2015ல் நடந்த போராட்டத்தின் போதுதான், அப்போது காங்கிரஸ் ஆட்சி நடந்தது. கம்யூனிஸ்ட் கட்சி பெரிய போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த நியமிக்கப்பட்ட யதீஷ் சந்திரா, அங்கிருந்த கம்யூனிஸ்டுகள் மீது லத்தி தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். இந்த தாக்குதல் மிகவும் மோசமாக நடந்தது.

    நாய்

    நாய்

    இதனால் பாஜக ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் இவரை ஹீரோ என்று கூறினார்கள். இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று கூட கூறினார்கள். இதில் பல கம்யூனிஸ்டுகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் யதீஷ் சந்திரா மீது கடும் கோபம் கொண்டனர். முன்னாள் கேரள முதல்வர் அச்சுதானந்தன், யதீஷ் சந்திராவை ''பைத்தியகார நாய்'' என்று கொச்சையாக திட்டினார். பினராயி விஜயன், அப்போதே இவரை வேலையைவிட்டு தூக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

    ஆனால் என்ன நடந்தது

    ஆனால் என்ன நடந்தது

    ஆனால் பினராயி முதல்வர் ஆன பின் நடந்தது வேறு. யதீஷ் சந்திராவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நினைத்தவர்களுக்கு ஆச்சர்யம். அவர் மிக முக்கியமான பகுதியான எர்ணாகுளத்தின் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டார். 2017 ஜனவரியில் அவர் எர்ணாகுளத்தின் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டார். ஆனாலும் இவர் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வந்தார்.

    தொடர்ந்து சர்ச்சை

    தொடர்ந்து சர்ச்சை

    இதை தொடர்ந்து கடந்த வருடம் எர்ணாகுளத்தில் நடந்த பந்தின் போது, இவர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் மீது நடத்திய லத்தி சார்ஜ் பெரிய வைரலானது. இதனால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் இவர் மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார்.

    வெளியே வந்தார்

    வெளியே வந்தார்

    ஆனால் ஆச்சர்யமாக போலீசும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் இவருக்கு சப்போர்ட்டாக களமிறங்கியதால் வழக்கு ஒன்றுமில்லாமல் போனது. அதிலிருந்து மனித உரிமைகள் ஆணையத்திற்கு இவர் மீது ஒரு கண் இருக்கிறது.

    சர்ச்சை என்ன

    சர்ச்சை என்ன

    இந்த நிலையில்தான் இவர் மீண்டும் சபரிமலை பிரச்சனை காரணமாக சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளார். ஆனால் பொன்.ராதாகிருஷ்ணன் உடன் வாக்குவாதம் செய்யும் முன்பே இவர் சர்ச்சையானார். ஆம், கேரளா மாநில பாஜக பொதுச் செயலாளர் கே. சுரேந்திரனனை கைது செய்தது இவர்தான். அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து இவருக்கு எதிராக நிறைய பேர் கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர்.

    எதிரி

    எதிரி

    இவர் கேரளாவில் நடக்கும் போராட்டங்களை கட்டுப்படுத்துவதில் சிறப்பானவர் என்று பெயர் பெற்றுள்ளார். ஒரு காலத்தில் இவரை ஹீரோவாக பார்த்த பாஜகவும் ஆர்எஸ்எஸும் இப்போது இவரை வில்லனாக பார்க்கிறது. அதே சமயம் கம்யூனிஸ்டுகளும், காங்கிரசும் இவருக்கு ஆதரவாக களமிறங்கி உள்ளது. ஒரே நாளில் இவர் இந்தியா முழுக்க வைரலாகி உள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+