நாடு முழுவதும் குறையும் கொரோனா பாதிப்புகள் - 7 மாநிலங்களில் 3 வாரங்களாக யாரும் மரணிக்கவில்லை
டெல்லி உள்ளிட்ட 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணிநேரத்தில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
டெல்லி: நாடு முழுவதும் கடந்த 3 வாரங்களாக ஏழு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 3 வாரங்களாக ஒரு தொற்று கூட ஏற்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இதுவரை 63 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கணிசமாக குறைந்திருக்கிறது. தினசரியும் கொரோனா உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்குள்ளாக உள்ளது. கொரோனா பாதிப்புக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 78 உயிரிழப்புகள் மட்டுமே பதிவாகி இருக்கிறது.

டெல்லி உள்ளிட்ட 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணிநேரத்தில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,110 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒரே நாளில் 78 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,43,625 ஆக அதிகரித்துள்ளதாகவும் 1,43,625 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை 10 ஆயிரத்துக்கு மேல் பதிவாகி வந்த நிலையில், இன்று குறைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஷ் பூஷன், நாடு முழுவதும் கடந்த 3 வாரங்களாக ஏழு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 3 வாரங்களாக ஒரு தொற்று கூட ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.
டெல்லி உள்ளிட்ட 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணிநேரத்தில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார். இதுவரை 63 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது
மொத்த கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மற்றும் கேரளா மாநிலங்களில் மட்டும் 71 சதவிகிதம் பேர் இருப்பதாகவும் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
-
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications