விவேக் மரணத்தில் அரசியல் செய்வது கேவலமான செயல்.. கொந்தளிக்கும் பாஜக இளைஞரணி செயலாளர்
சேலம்: தோல்வி பயத்திலேயே வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பாதுகாப்பில்லை என திமுக பொய் பரப்பி வருவதாக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி. செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video
மேலும், விவேக்கின் மரணத்தை வைத்து அரசியல் செய்வது மிகவும் கேவலமான செயல் என்றும் அவரது மரணம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் தெளிவாக விளக்கம் அளித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் களரம்பட்டி பகுதியில் பாஜக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் பாஜக
இதனை அக்கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி. செல்வம் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் தர்பூசணிகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் மூன்றாவது முறையாக அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற அவர், தமிழக அமைச்சரவையில் பாஜக உறுப்பினர்கள் நிச்சயம் இடம் பெறுவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உதவி மையம்
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்கள் மத்தியில் பரவி வரும் புரளியை நீக்க பாஜக சார்பில் வரும் திங்கட்கிழமை முதல் கொரோனா விழிப்புணர்வு முகாம் மற்றும் உதவி மையம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் மாவட்டம் வாரியாக படுக்கை வசதி, தடுப்பூசி இருப்பு குறித்து பொது மக்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

கேவலமான செயல்
மேலும், தடுப்பூசியுடன் தொடர்புபடுத்தி, விவேக்கின் மரணத்தை வைத்து சிலர் அரசியல் செய்வது மிகவும் கேவலமான செயல் என்றும் அவரது மரணம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் தெளிவாக விளக்கம் அளித்துள்ளது என்றார்.

10 தொகுதிகள்
தமிழகத்தில் அதிமுக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும், 20 தொகுதிகளில் போட்டியிட்டுள்ள பாஜக பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தமிழக அமைச்சரவையில் நிச்சயம் இடம்பெறுவோம் என்றார்.

மதரீதியாக பார்க்கிறார்கள்
தமிழகத்தில் நடைபெறும் கொலைகளை கூட ஜாதி ரீதியாக மத ரீதியாக பிரித்துப் பார்க்கும் கட்சியாக திமுக உள்ளதாக சாடிய அவர் இந்த நிலை மாற வேண்டும் தமிழகத்தில் அனைத்து உயிர்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்றார்.

தோல்வி பயம்
துணை ராணுவத்தினர் மற்றும் சிசிடிவி கண்காணிப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ள நிலையில், தோல்வி பயத்திலேயே திமுகவினர் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு இல்லை என பொய் பரப்பி வருவதாக தெரிவித்தார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications