மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை இலவசமாக வழங்கணும்.. மத்திய அரசை வலியுறுத்தி கேரள சட்டசபையில் தீர்மானம்!
திருவனந்தபுரம்: மத்திய அரசு, அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

தடுப்பூசி பற்றாக்குறை
தற்போது நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. ஆனால் நாட்டில் கடுமையான தடுப்பூசி பற்றாக்குறை நீடித்து வருகிறது. இதன் காரணமாக கடந்த மாதம் 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்ட திட்டம் கூட இன்னும் முழுமையாக தொடங்கப்படவில்லை.

கேரள சட்டசபையில் தீர்மானம்
ஒவ்வொரு மாநிலமும் கூடுதல் தடுப்பூசிகளை எதிர்பார்க்கின்றன. அதே வேளையில் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதால் மத்திய அரசு, மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்க வேண்டும் என்று கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் ஆதரவு
கேரளாவில் ஆளும் சிபிஐ (எம்) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தது. மாநில சுகாதார, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தீர்மானத்தை தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து ஆளும்கட்சி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.

அனைவரும் கைகோர்க்கணும்
இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், 'கொரோனா உடன் போராடுவதற்காக இலவச தடுப்பூசியை வழங்க வேண்டும், இது சமூகத்தின் அனைத்து பிரிவுகளும் வைரஸிலிருந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும். தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும், மத்திய அரசு தடுப்பூசியை இலவசமாக வழங்க உறுதி செய்வதற்கும் அனைத்து மாநிலங்களும் கைகோர்க்க வேண்டும், என்று வீணா ஜார்ஜ் கேட்டுக் கொண்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications