Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பன்றிக்கு ரெஸ்ட் விட்டா.. பரவிய பறவை காய்ச்சல்! செத்து மடியும் வாத்துகள்! கேரள எல்லையில் தீவிர சோதனை

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம் : கொரோனா, ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சலை தொடர்ந்து தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் திடீரென பரவி வருவதன் எதிரொலியாக உடுமலை பகுதியில் தமிழக-கேரள எல்லையில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மக்களை அச்சுறுத்தலில் ஆழ்த்தி தற்போது ஓரளவு குறைந்துள்ள கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வதற்குள் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் குரங்கு அம்மை, பன்றி காய்ச்சல் பாதிப்பு என அடுத்தடுத்து நோய்களால் அம்மாநில மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா பாதிப்பு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் தமிழகத்தின் அருகில் உள்ள கேரளாவில் கொரோனா மட்டுமல்லாது குரங்கு காய்ச்சல், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் என பாதிப்பு சற்று அதிகமாகவே இருந்தது.

பறவை காய்ச்சல்

பறவை காய்ச்சல்

கடந்த ஆகஸ்ட் மாதம் வயநாட்டில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக சுமார் 300க்கும் மேற்பட்ட பன்றிகளை கொல்ல கேரள மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் திடீரென பரவி வருவதன் எதிரொலியாக உடுமலை பகுதியில் தமிழக-கேரள எல்லையில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 வாத்துகள் உயிரிழந்தன

வாத்துகள் உயிரிழந்தன

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் வாத்துப்பண்ணைகளில் வளர்த்து வந்த வாத்துகள் திடீரென இறந்தன. இது குறித்து தகவல் அறிந்த கேரள கால்நடைத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் வாத்துகள் பறவை காய்ச்சலால் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவுதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இந்நிலையில் தமிழக அரசு மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பறவை காய்ச்சல் தமிழகத்தில் பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தமிழக கேரள எல்லையான மூணாறு செல்லும் மலைவழிப்பாதையில் அமைந்துள்ள 9/6 செக்போஸ்ட் பகுதியில் கால்நடைத்துறை சார்பில் மருத்துவக்குழுவினர் தீவிர கண்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

 தீவிர கண்காணிப்பு

தீவிர கண்காணிப்பு


அங்கேயே தங்கியிருந்து கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களுக்கும் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். .இதே போல் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு முட்டை, கறிக்கோழி போன்றவற்றை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த பணியானது இரவு பகலாக சுழற்சி முறையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு மேற்கொண்டு வருவதாக கால்நடை துறையினர் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+