ரியாத்தில் ஈழத்தமிழ் கவிஞரின் கவிதை நூல் வெளியீட்டு விழா!
ரியாத்: இலங்கையைச் சேர்ந்த தமிழ்க் கவிஞர் இனியவன் இசாருத்தீனின் 'மழை நதி கடல்' என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழா ரியாத்தில் நடந்தது.
இலங்கையைச் சேர்ந்த தமிழ்க் கவிஞர் இனியவன் இசாருத்தீன் எழுதிய 'மழை நதி கடல்' என்னும் கவிதை நூலின் வெளியீட்டு விழா, மழையோ நதியோ கடலோ இல்லாத பாலைவன ரியாத் மாநகரில் உள்ள டுலிப் இன் (Tulip inn) என்னும் நட்சத்திர விடுதியில் எழுத்துக்கூடம் அமைப்பு சார்பில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு திரு. சுவாமிநாதன் தலைமைத் தாங்கினார். சவூதி அரேபியாவிற்கான இலங்கை துணைத் தூதர் எ. ஷபருல்லாஹ் கான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். ரியாத்தில் உள்ள இராணுவ மருத்துவமனையின் தலைமை மருத்துவர் திரு. எம்.எம். ஷஹீத் சிறப்புரை ஆற்றினார்.
திரு. இம்தியாஸ் நூலாசிரியர் பற்றி அறிமுக உரையாற்றினார்.
கவிஞர்கள் திரு. கே. வி. ராஜா, திருமதி. மலர்ச்செல்வி, திரு. ஜாஃபர் சாதிக், திரு.தங்கஸ்வாமி, திரு.வெற்றிவேல், திரு.ஸ்கந்த ராஜா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். திரு. ஜவஹர் சவரிமுத்து முதல் நூல் பிரதியை வெளியிட இலங்கைத் துணைத் தூதர் பெற்றுக்கொண்டார்.
கவிஞர் இப்னுஹம்துன் தனது ஆய்வுரையில் தற்போது தமிழில் கவிதைகளை விட கவிஞர்களே அதிகம் என்று நகைச்சுவையாகக் கூறினார். கவிஞர் இசாருத்தீனின் நூலில் காணப்பெறும் கவிநயங்களை, நுட்பங்களை சுட்டிக்காட்டினார்.
மன்னர் சவூத் பல்கலைக்கழகப் பேராசியர் மாசிலாமணி பாராட்டுரை அளித்தார்.
எழுத்துக்கூடப் பொறுப்பாளர் கவிமணி(இலக்கியர் ) ஷாஜஹான் நிகழ்ச்சியை சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.
ஏற்புரை ஆற்றிய நூலாசிரியர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். திரு. அப்துல் மன்னான் நன்றியுரையுடன் விழா முடிந்தது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications