ரியாத்தில் ஈழத்தமிழ் கவிஞரின் கவிதை நூல் வெளியீட்டு விழா!
ரியாத்: இலங்கையைச் சேர்ந்த தமிழ்க் கவிஞர் இனியவன் இசாருத்தீனின் 'மழை நதி கடல்' என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழா ரியாத்தில் நடந்தது.
இலங்கையைச் சேர்ந்த தமிழ்க் கவிஞர் இனியவன் இசாருத்தீன் எழுதிய 'மழை நதி கடல்' என்னும் கவிதை நூலின் வெளியீட்டு விழா, மழையோ நதியோ கடலோ இல்லாத பாலைவன ரியாத் மாநகரில் உள்ள டுலிப் இன் (Tulip inn) என்னும் நட்சத்திர விடுதியில் எழுத்துக்கூடம் அமைப்பு சார்பில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு திரு. சுவாமிநாதன் தலைமைத் தாங்கினார். சவூதி அரேபியாவிற்கான இலங்கை துணைத் தூதர் எ. ஷபருல்லாஹ் கான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். ரியாத்தில் உள்ள இராணுவ மருத்துவமனையின் தலைமை மருத்துவர் திரு. எம்.எம். ஷஹீத் சிறப்புரை ஆற்றினார்.
திரு. இம்தியாஸ் நூலாசிரியர் பற்றி அறிமுக உரையாற்றினார்.
கவிஞர்கள் திரு. கே. வி. ராஜா, திருமதி. மலர்ச்செல்வி, திரு. ஜாஃபர் சாதிக், திரு.தங்கஸ்வாமி, திரு.வெற்றிவேல், திரு.ஸ்கந்த ராஜா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். திரு. ஜவஹர் சவரிமுத்து முதல் நூல் பிரதியை வெளியிட இலங்கைத் துணைத் தூதர் பெற்றுக்கொண்டார்.
கவிஞர் இப்னுஹம்துன் தனது ஆய்வுரையில் தற்போது தமிழில் கவிதைகளை விட கவிஞர்களே அதிகம் என்று நகைச்சுவையாகக் கூறினார். கவிஞர் இசாருத்தீனின் நூலில் காணப்பெறும் கவிநயங்களை, நுட்பங்களை சுட்டிக்காட்டினார்.
மன்னர் சவூத் பல்கலைக்கழகப் பேராசியர் மாசிலாமணி பாராட்டுரை அளித்தார்.
எழுத்துக்கூடப் பொறுப்பாளர் கவிமணி(இலக்கியர் ) ஷாஜஹான் நிகழ்ச்சியை சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.
ஏற்புரை ஆற்றிய நூலாசிரியர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். திரு. அப்துல் மன்னான் நன்றியுரையுடன் விழா முடிந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications