திருக்கார்த்திகை தீபம் தமிழக கோவில்களில் கோலாகலம் - சொக்கனுக்கு உகந்த சொக்கப்பனை ஏற்றி வழிபாடு

கார்த்திகை தீப திருவிழாவை ஒட்டி சிவ, விஷ்ணு ஆலயங்களில் சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருக்கார்த்திகை தீப திருவிழா இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிவ விஷ்ணு ஆலயங்களில் சொக்கப்பனை ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது. அழகர் கோவில், தஞ்சாவூர் பெரியகோவிலில் நடைபெற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

கார்த்திகை திருநாளில் சிவ ஆலயத்திலும் முருகன் ஆலயங்களிலும் இன்று மாலை சொக்கப்பனை கொளுத்துவார்கள். சிவபெருமான் அடிமுடி தெரியாவண்ணம் பிரம்மா, விஷ்ணுவுக்கு காட்சி அளித்ததையும் நினைவூட்டும் விதமாகவும், சொக்கப்பனை ஏற்றப்படுவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. சிவனுக்கு சொக்கன் என்ற பெயரும் உள்ளதால் சொக்கப்பனை என்ற சொல் ஏற்பட்டது.

கார்த்திகை பவுர்ணமி தினமான இன்று தமிழகத்தில் திருக்கார்த்திகை திருவிழா கொண்டாடப்படுகிறது. சிவ ஆலயங்களிலும் முருகன் ஆலயங்களிலும் இன்று மாலை ருத்ர தீபம் ஏற்றப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது இதில் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர். இன்று கோவிலில் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.

சொக்கப்பனை விழா

சொக்கப்பனை விழா

தஞ்சை பெரிய கோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாய பெருவுடையார் ஆலயத்தில்
திருக்கார்த்திகை தினத்தினை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் பெரிய நாயகி அம்மன் பெருவுடையார் சுவாமி பல்லக்கில் எழுந்தருளி மேள தாளங்கள் முழங்க சுவாமி புறப்பாடு நடைபெற்று பெரிய கோவில் முன்பு சுவாமிக்கு தீபாரதனை காட்டப்பட்டு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

தேவ மரம் பனை

தேவ மரம் பனை

கற்பக தருவான பனை பனை மரம் கல்பதரு என்றழைக்கப்படுவது. தேவமரம் என்றும் அழைக்கப்படுவது. பனை மரத்தின் வேர் முதற்கொண்டு நுனி வரை அனைத்துப் பொருட்களும் மனித வாழ்க்கைக்கு உதவுகின்றது. வேறு எந்த மரத்திற்கும் இல்லாத சிறப்பு பனை மரத்திற்கு மட்டும் உண்டு.

 முக்தி நிலை

முக்தி நிலை

பனை ஓலை பச்சையாக இருந்தாலும் தீ பட்டவுடன் கொழுந்துவிட்டு எரியும் தன்மை உடையது. பனை மரத்தினைப் போல, வாழ்க்கை முழுவதும் பிறருக்கு உதவியாக இருந்தால், ஸதேக முக்தி அதாவது இந்த வாழ்க்கையிலேயே சுவர்க்கத்தைக் கண்டு, முக்தியை அடைய முடியும் என்பதைக் காட்டுவதற்காகவே சொர்க்கப் பனை அல்லது சொக்கப்பனை அமைந்துள்ளது.

அடிமுடி தெரியாத சிவன்

அடிமுடி தெரியாத சிவன்

பனை ஓலை கொண்டு கோபுர வடிவில் செய்து அதனை ஏற்றுவதால் தெரியும் ஜோதியை தரிசனம் செய்வது பெரும் முக்தியைத் தரும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. சிவபெருமான் அடிமுடி தெரியாவண்ணம் பிரம்மா, விஷ்ணுவுக்கு காட்சி அளித்ததையும் நினைவூட்டும் விதமாகவும், சொக்கப்பனை ஏற்றப்படுவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

அமோக விளைச்சல் கிடைக்கும்

அமோக விளைச்சல் கிடைக்கும்

விஷ்ணு ஆலயங்களிலும் சொக்கப்பனை விழா நடைபெறுகிறது. ஸ்ரீரங்கம் ரங்காநாதர் கோவிலிலும் அழகரி கோவிலிலும் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. கோவில்களில் சொக்கப்பனை எரிந்து முடித்ததும், அதிலிருந்து பெறப்படும் கரியை காப்பாக நெற்றியில் பூசிக் கொள்வது வழக்கம். சாம்பலை எடுத்துச் சென்று வயல்வெளிகளில் தூவினால், அந்த முறை அமோக விளைச்சல் நிச்சயம் என்பது நம்பிக்கை.

திருவண்ணாமலை தீப திருவிழா

திருவண்ணாமலை தீப திருவிழா

கார்த்திகை தீபம் கொண்டாடப்படும் திருவண்ணாமலையில் சிவமாக காட்சி தரும் மலை மீது மகா தீபம் ஏற்றப்படுவதால் சொக்கப்பனை கொளுத்தும் வழக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+