ஒரு மாதத்துக்கு டிவி பக்கமே வர மாட்டோம்.. காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு
டிவி விவாதங்களில் ஒரு மாசத்துக்கு பங்கேற்க மாட்டோம் என காங்கிரஸ் அறிவித்துள்ளது
Recommended Video
டெல்லி: ஒரு மாதத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் டிவி விவாதங்களில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. கடந்த முறை பெற்றதை விட கூடுதல் எண்ணிக்கையில் ஜெயித்தது மட்டுமே ஆறுதல். அப்படியும் கூட எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்காத பரிதாப நிலை தொடர்கிறது.
இந்த பெரும் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக ராகுல் காந்தி விரும்புகிறார். விருப்பத்தையும் தெரிவித்து விட்டார். யாரையும் சந்திக்காமல் இருந்து வருகிறார்.

தெலுங்கானா
காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அகில இந்திய அளவில் அது வலுவான கூட்டணியை ஏற்படுத்தத் தவறி விட்டது. குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் அதன் கூட்டணி அணுகுமுறை பெரும் தவறிழைத்து விட்டது. அதேபோலத்தான் ஆந்திரா, தெலுங்கானா என பல மாநிலங்களிலும் அது சரிவர செயல்படவில்லை.

மிகபெரிய வெற்றி
காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறைகள் ஒரு பக்கம் இருந்தால், அதன் கூட்டணிக் கட்சிகள் மற்றும் தோழமைக் கட்சிகள் பிரதமர் கனவோடு வலம் வந்ததால் மக்கள் வெறுப்படைந்து பாஜகவுக்கு குத்தி விட்டனர். இதனால்தான் பாஜக இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வெற்றியைப் பெற்று விட்டது.

முக்கிய முடிவு
தனது பெரும் தோல்விக்கான காரணத்தையும், சுய பரிசோதனையிலும் தற்போது காங்கிரஸ் கட்சி இறங்கியுள்ளது. ஒருபக்கம் ராகுல் காந்தியை சமாதானப்படுத்தும் வேலைகள் நடந்து வருகின்றன. மறுபக்கம் தவறுகளை சரி செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

டிவி விவாதங்கள்
ஒரு மாதத்திற்கு டிவி விவாதங்களில் கலந்து கொள்வதில்லை என்ற முடிவை காங்கிரஸ் கட்சி எடுத்து அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா வெளியிட்டுள்ள டிவீட்டில், ஒரு மாதத்திற்கு டிவி விவாதங்களில் எங்களது செய்தித் தொடர்பாளர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள். எனவே அனைத்து மீடியா சேனல்கள், ஆசிரியர்கள், எங்களது பிரதிநிதிகளை டிவி ஷோக்களுக்கு அழைக்க வேண்டாம் என்று கேட்டுள்ளார்.

தவிர்ப்பு
டிவி விவாதங்களில் கலந்து கொண்டு தேவையில்லாமல் எதையாவது பேசி மேலும் சர்ச்சை மற்றும் சிக்கலை ஏற்படுத்துவதைத் தவிர்க்கும் முகமாகவே இப்படி ஒரு முடிவை காங்கிரஸ் எடுத்துள்ளதாக சொல்கிறார்கள். அதுவும் சரிதான். இப்பவெல்லாம் டிவி விவாதங்களில் சும்மாவா இருக்கிறார்கள். எதையாவது நோண்டி வாயிலிருந்து பிடுங்காமல் விடுவதில்லையே.
-
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
கொங்கு வேளாளர் கவுண்டரை புறக்கணிச்சிட்டாங்க... காங்கிரஸ் மீது ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு -
காங்கிரஸில் இணைந்த 6 நாளில் பென்னாகரத்தில் ஜி.கே.எம்.தமிழ்க் குமரன் போட்டி! தந்தையை எதிர்க்கிறாரா? -
சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல் -
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்! -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்?












Click it and Unblock the Notifications