இந்த மூன்றும் முக்கியம்.. இதுதான் அறிகுறி.. கொரோனா பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
கொரோனா வைரஸ் உங்களை தாக்கி இருந்தால் மொத்தம் மூன்று விதமான முக்கிய அறிகுறிகள் மூலம் அதை கண்டுபிடிக்க முடியும்.
சென்னை: கொரோனா வைரஸ் உங்களை தாக்கி இருந்தால் மொத்தம் மூன்று விதமான முக்கிய அறிகுறிகள் மூலம் அதை கண்டுபிடிக்க முடியும்.
Recommended Video
கொரோனா வைரஸ் குறித்து உலக ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கி உலகம் முழுக்க பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் தீவிர ஆராய்ச்சிகளை செய்து வருகிறார்கள். இந்த வைரஸ் எப்படிப்பட்ட வைரஸ் என்று இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை.
அதேபோல் இந்த வைரஸ் எப்படி உருவானது, எப்படி குணப்படுத்துவது என்றும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் அறிகுறிகள் மற்றும் வெகு சில பின் விளைவுகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் கொரோனா அறிகுறி குறித்து மக்கள் அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.

என்ன அறிகுறி
இருமல்தான் கொரோனாவின் முதல் அறிகுறி ஆகும். ஆனால் இந்த இருமல் சாதாரணமாக இருக்காது. இது வறட்டு இருமல் போல இருக்கும். ஆனால் வெறும் சாதாரண வறட்டு இருமல் போல இது இல்லாமல் கொஞ்சம் வலியோடு இருக்கும். நீங்கள் கொரோனா வந்து இருமினால் உங்கள் மூச்சு குழல் அடைக்கும். இருமலின் போதே உங்கள் இதயம் லேசாக வலிக்கும். மூச்சு குழலில் இருமலின் போது ஊசி வைத்து குத்துவது போல வலி ஏற்படும்.

தொண்டை எப்படி
சில சமயம் உங்கள் தொண்டை எரிவது போல உணர்வு ஏற்படும். இதுதான் உங்களுக்கு ஏற்படும் முதல் அறிகுறி. அடுத்த அறிகுறி காய்ச்சல். உங்கள் உடல் சூடு அதிகரிக்கும். காய்ச்சல் அதிகமாக இருந்தால் அது கொரோனா அறிகுறியாக இருக்கலாம். 99.5 டிகிரி ஃபெரன்ஹீட் வரை உங்களுக்கு உடல் வெப்பநிலை இருந்தால் பிரச்சனை, சிக்கல் இல்லை.

காய்ச்சல் எப்படி
ஆனால் அதற்கு மேல் உடல் வெப்பநிலை இருந்தால் அதுதான் காய்ச்சல். இது கொரோனாவிற்கு ஒரு அறிகுறி ஆகும். இந்த மூன்றாவது அறிகுறிதான் முக்கியமானது ஆகும். மூன்றாவது அறிகுறி இருந்தால் உங்களுக்கு கொரோனா இருப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதை கொஞ்சம் சீரியஸான அறிகுறி என்று உலக சுகாதார மையம் வரையறுக்கிறது. இந்த அறிகுறி இருந்தால் உடனே நீங்கள் மருத்துவரை பார்க்க வேண்டும்.

வயிற்றுப்போக்கு
இது இல்லாமல் உங்களுக்கு சமயங்களில் வயிற்றுப்போக்கும் அறிகுறியாக இருக்கலாம். காய்ச்சல் இல்லாமல் நெஞ்சு மட்டும் வலித்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம். சிலருக்கு அறிகுறிகள் வித்தியாசமாக இருக்கும். ஜலதோஷம், அஜீரண கோளாறு, பசியின்மை, தலைவலி, உடல் வலி, சோர்வு ஆகியவை கூட அறிகுறியாக இருக்கலாம். இதை எல்லாம் நீங்கள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

சவால் என்ன
அதே சமயம் சிலருக்கு இந்த அறிகுறி எதுவும் இல்லாமலே கொரோனா ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை உலகில் கொரோனா ஏற்பட்டவர்களில் வெகு சிலருக்கு எந்த விதமான அறிகுறியும் இன்றி கொரோனா வைரஸ் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் நீங்கள் எப்போதும் கவனமாக இருப்பது மிக முக்கியமானது ஆகும். உங்கள் வாழ்க்கை முறையில் சுத்தம் மற்றும் பாதுகாப்பு இரண்டையும் ஒரு அங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications