கட்சியில் முக்கிய பொறுப்பு: ராகுல் காந்தி தான் முடிவு செய்ய வேண்டும்- சோனியா

மாறிவரும் அரசியல் சூழல்களை மனதில் கொண்டு பார்த்தால், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது தவிர்க்க முடியாதது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் கூறியிருந்தார்.
மேலும் காங்கிரஸ் கட்சியில் கூடுதல் பங்களிப்பை ராகுல் காந்தி மேற்கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது. இது தொடர்பாக செப்டம்பர் மாதத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகும்.
காங்கிரஸ் கட்சிக்கான ராகுல் காந்தியின் பங்களிப்பு நிச்சயம் தற்போதைய நிலைமையைவிட கூடுதலாகவே இருக்கும். குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் முடியட்டும். செப்டம்பர் மாதம் வரை பொறுத்திருங்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.
இப்போது காங்கிரஸ் கட்சியின் உயர் நிலைக் குழுவிலிருந்து பிரணாப் முகர்ஜி வெளியேறிவிட்ட நிலையில், அந்த இடத்துக்கு ராகுல் காந்தி நியமிக்கப்படக் கூடும் என்ற யூகங்கள் எழுந்துள்ளன.
இந் நிலையில் இன்று டெல்லியில் நிருபர்களிடம் பேசிய சோனியா காந்தியிடம், திக்விஜய் சிங்கின் கருத்துக் குறித்துக் கேட்டபோது, கட்சியில் கூடுதல் பங்களிப்பை செய்வதா இல்லையா என்பது குறித்து ராகுல் காந்தி தான் முடிவு செய்ய வேண்டும். வேறு யாரும் அந்த முடிவை எடுக்க முடியாது. ராகுலே அதை முடிவு செய்யட்டும் என்றார்.
-
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
கொங்கு வேளாளர் கவுண்டரை புறக்கணிச்சிட்டாங்க... காங்கிரஸ் மீது ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு -
குளச்சல் பிரின்ஸ், மயிலாடுதுறை ராஜ்குமார் உள்பட 5 காங். சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு! -
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்! -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
புதுவையில் ஏப்.6-ல் ராகுல் பிரச்சாரம்! ஸ்டாலினும் மாலையில் பரப்புரை!












Click it and Unblock the Notifications