சிஐஎஸ்எப்-இல் 1149 பணியிடம்.. பிளஸ் 2 முடித்திருந்தால் போதும்.. எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
சென்னை: மத்திய தொழில் பாதுகாப்பு படையில்( Central Industrial Security Force (CISF) காலியாக உள்ள 1149 பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். Constable வேலைக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 12-ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 18-23 ஆண்டுகள் ஆகும். உடல் தகுதி தேர்வு, எழுத்து தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

https://www.cisf.gov.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 04.03.2022 ஆகும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.21,700-69,100/- சம்பளம் வழங்கப்படும். பணியிடம் உள்ளிட்ட மேலும் விவரங்களை https://www.cisf.gov.in/ என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு சென்று https://www.cisfrectt.in/ அறிவிப்பு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும். அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும். மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டியது மிகவும் அவசியமாகும்.












Click it and Unblock the Notifications