அப்பா, மகன் என்றாலே ப.சி, கார்த்திதானா?: கேட்கிறார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
டெல்லி: தமிழக காங்கிரஸ் கட்சியில் எத்தனையோ குடும்பங்களில் தந்தையும் மகனும் தலைவர்களாக இருக்கிறார்கள். சிதம்பரத்தை நான் எந்தவகையிலும் விமர்சனம் செய்யவில்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தமிழர்கள் பகுதியில் பிரசாரம் செய்வதற்காக டெல்லி சென்றுள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நேற்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு செய்தியாளர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியது. செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அளித்த பதில்கள்.

சென்னை வருகிறார்
கேள்வி: தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கை சந்தித்ததற்கான காரணம் என்ன?
பதில்: நான் எப்போது டெல்லி வந்தாலும் அவரை சந்திப்பது வழக்கம். அவர் விரைவில் தமிழகத்துக்கு வருகை தர இருக்கிறார். அனேகமாக 2 நாள் பயணமாக வருகிற 8ஆம்தேதியும், அதன்பிறகு 2 நாள் பயணமாக 21ஆம்தேதியும் அவர் சென்னை வருவார் என தெரிகிறது.
மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்திக்க வேண்டும் என்று கூறினார். அதற்காக சென்னையில் விரைவில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்படுகிறது. மேலும் முகுல் வாஸ்னிக் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் நிர்வாக கூட்டம் மற்றும் அவருடைய சுற்றுப்பயணம் குறித்து திட்டமிடுவது தொடர்பாக அவரை நான் சந்தித்தேன்.
விளக்கம் கேட்கவில்லை
கேள்வி: ப.சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரத்தை சமீபத்தில் நீங்கள் விமர்சனம் செய்ததால் கட்சித்தலைமை அது குறித்த விளக்கத்தை உங்களிடம் கேட்டிருப்பதாகவும், அது தொடர்பாக நீங்கள் சோனியா காந்தியை சந்திக்க டெல்லி வந்திருப்பதாகவும் கூறப்படுவது உண்மையா?
பதில்: இது முற்றிலும் தவறான தகவல். அப்படி என்னிடம் விளக்கம் எதுவும் கேட்கப்படவில்லை. ப.சிதம்பரம் என் மீது கூறியதாக சொல்லப்படும் புகார்களுக்கு கட்சி தலைமைக்கு ஏற்கனவே தேவையான விளக்கம் அளித்து இருக்கிறேன். சோனியா காந்தி தொலைபேசியில் இதுகுறித்து கேட்டார். நான் அவருக்கு விளக்கம் அளித்திருக்கிறேன். அது மட்டுமல்ல. ஜெயந்தி நடராஜன் கட்சியை விட்டு விலகியது மட்டுமின்றி காங்கிரஸ் மேலிடத்தை குறை கூறியது போன்றவற்றுக்குத்தான் நான் பதில் கூறினேன்.
அப்பாவும் மகனும்
கேள்வி: தமிழக காங்கிரஸ் கட்சியில் ஒரு தலைவரும் அவருடைய மகனும் என்று கூறினால் மறைமுகமாக ப.சிதம்பரத்தை கூறுகிறீர்கள் என்றுதானே எடுத்துக் கொள்வார்கள்?
பதில்: தமிழக காங்கிரஸ் கட்சியில் எத்தனையோ குடும்பங்களில் தந்தையும் மகனும் தலைவர்களாக இருக்கிறார்கள். நானும் என் மகனும் இருக்கிறோம். முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியும் அவர் மகனும் இருக்கிறார்கள். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அன்பரசு மற்றும் அவருடைய மகன் காங்கிரசில் இருக்கிறார்கள். கோவை ராமசாமி காங்கிரசில் இருக்கிறார். அவருடைய மகனும் இருக்கிறார். சிதம்பரத்தை நான் எந்தவகையிலும் விமர்சனம் செய்யவில்லை.
கார்த்திக்கு நோட்டீஸ்
கேள்வி: கார்த்தி சிதம்பரத்துக்கு நீங்கள் அனுப்பிய நோட்டீஸ் தொடர்பாக உங்களுடைய இந்த டெல்லி வருகையின் போது தலைவர்களுடன் ஆலோசிக்கப்பட்டதா?
பதில்: கார்த்தி சிதம்பரம் பேசிய ஒரு கூட்டத்தில் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசி இருக்கிறார். மேலிடத்தைக் குறை கூறி இருக்கிறார். அவை பற்றியெல்லாம் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி இருந்தேன். அந்த நோட்டீசுக்கு அவர் பதில் அளித்திருக்கிறார். தான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர் என்பதால், அகில இந்திய காங்கிரஸ் தலைமை விளக்கம் கேட்டால்தான் தருவேன் என்று கூறி இருக்கிறார். அவர் தந்த பதிலை மேலிடத்துக்கு அனுப்பி இருக்கிறேன்.
முடிவுக்கு வந்துவிட்டதா?
கேள்வி: கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீங்கள் தலைமைக்கு எழுதி இருக்கிறீர்களா?
பதில்: நான் என்ன எழுதி இருக்கிறேன் என்பது பற்றி உங்களிடம் சொல்ல முடியாது.
கேள்வி: கார்த்தி விவகாரம் முடிவுக்கு வந்து விட்டது என்று கூறுகிறீர்களா?
பதில்: நான் அவருடைய பதிலை தலைமைக்கு அனுப்பி விட்டேன். அவர்கள் முடிவு எடுப்பார்கள்.
ராகுலை சந்திக்கவில்லை
ராகுல் காந்தியை சந்திக்க நான் நேரம் கேட்கவில்லை. அடுத்த வாரம் சென்னைக்கு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் வரவுள்ளார். அது குறித்து மட்டுமே அவருடன் ஆலோசனை நடத்தினேன் என்று கூறி ஒருவழியாக பேட்டியை நிறைவு செய்தார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications