நாங்க எக்ஸாம் எழுதுறது இருக்கட்டும்.. நீங்க எப்படி எழுதுவீங்க.. மோடி உரையை கலாய்த்த நெட்டிசன்ஸ்
பிரதமர் மோடியின் தேர்வு குறித்த உரையை சமூக வலைத்தளங்களில் பலரும் கிண்டல் அடித்து இருக்கிறார்கள்.
Recommended Video
சென்னை: பிரதமர் மோடியின் தேர்வு குறித்த உரையை சமூக வலைத்தளங்களில் பலரும் கிண்டல் அடித்து இருக்கிறார்கள். இந்த டிவிட்கள் எல்லாம் வைரல் ஆகி இருக்கிறது.
பிரதமர் மோடி 'எக்ஸாம் வாரியார்' என்ற புத்தகம் எழுதி இருக்கிறார். மாணவர்கள் எப்படி தேர்விற்கு பயம் இல்லாமல் தயாராக வேண்டும் என்று இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அந்த வகையில் தற்போது தேர்வு பயணம் குறித்து மாணவர்கள் முன்னிலையில் உரையாற்றி வருகிறார். இதில் மாணவர்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.
|
யாருக்கு தெரியும்
மோடி நேரு குறித்து அடிக்கடி குற்றச்சாட்டு வைப்பதை இவரை கிண்டல் செய்துள்ளார். அதில் ''மோடியின் புத்தகத்தை படிக்கும் போது கவனமாக படிக்க வேண்டும். சமயங்களில் தேர்வில் தோல்வி அடைவதற்கு கூட நேருதான் காரணம் என்று அவர் கூறுவார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
|
நேருதான் காரணம்
ஐவரும் நேரு, மோடி வைத்து காமெடி செய்துள்ளார். அதில் ''மாணவர்: நான் வேதியியல் தேர்வுல பெயில் ஆகிட்டேன். மோடி: நீ பெயில் ஆனதுக்கு யார் காரணம். மாணவர்: கஷ்டமான சிலபஸ் உருவாக்குன நேருதான் காரணம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
|
பக்கோடா படிப்பு
இவர் இதையும் பக்கோடாவையும் சேர்த்து பேசியுள்ளார். அதில் பக்கோடா எப்படி விற்க வேண்டும் என்று கற்றுக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
|
பிரச்சனை
இவர் ''பல்வேறு மாநிலங்கள் கல்வி சதவிகிதத்தில் குறைவாக இருக்கிறது, ஆரம்ப கல்வி கிடைப்பது இல்லை, கல்விக்கு குறைந்த அளவே பணம் ஒதுக்கப்படுகிறது, அரசு பள்ளிகள் சரியாக இல்லை அதை பற்றி பேசாமல் தேர்வு பயம் பற்றி பேசி பயன் இல்லை'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
|
உங்களுக்கும் தேர்வு
இந்த நிகழ்வில் ஒரு ஒரு மாணவர் ''அடுத்த வருடம் நம்ம ரெண்டு பேருக்கும் எக்ஸாம் இருக்கு. எனக்கு +12 எக்ஸாம், உங்களுக்கு லோக் சப, நீங்க அதை நினைச்சு பயப்படுறீங்களா?'' என்று கேட்டு இருக்கிறார்.