For Daily Alerts
Just In
மரத்தில் பஸ் மோதி 2 பேர் சாவு - 40 பேர் காயம்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி அருகே மரத்தில் பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் பயணம்செய்த 2 பேர் இறந்தனர். 40 பேர் காயமடைந்தனர்.
பாண்டிச்சேரியிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை திருக்கனூருக்கு தனியார் பஸ்ஒன்று புறப்பட்டது. திருக்கனூர் அருகே சோராபேட்டை என்ற இடத்தில் பஸ்ஸின் முன்டயர் ஒன்று திடீரென்று வெடித்தது.
இதனால், கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது.இதில் பஸ்ஸில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 40 பேர்காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் புதுவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இவர்களில் இருவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. திருக்கனூர்போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
யு.என்.ஐ.
Story first published: Tuesday, September 5, 2000, 5:30 [IST]