For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வக்கீல் வேணுகோபாலை அனுப்புங்க..

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

நடிகர் ராஜ்குமாரை மீட்கும் முயற்சியில் நக்கீரன் கோபால் தோல்வியடைந்து விட்டார். எனவேமைசூர் தடா கைதிகளுக்காக ஆஜராகும் வழக்கறிஞர் வேணுகோபாலை அரசுத் தூதராக அனுப்பவேண்டும் என்று கர்நாடக எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.

செவ்வாய்க்கிழமை முதல்வர் கிருஷ்ணா கூட்டியிருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பு, சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவரும், மதச்சார்பற்ற ஜனதாதளதலைவருமான கே.எச்.ஸ்ரீனிவாஸ் கூறுகையில், ராஜ்குமாரை மீட்கும் முயற்சியில் கோபால்தோல்வியடைந்து விட்டார்.

வேணுகோபலை தூதாரக அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன வீரப்பனுக்காகபல வழக்குகளில் வேணுகோபால் ஆஜராகியுள்ளார். எனவே அடுத்த முறை கோபால், வீரப்பனைச்சந்திக்கச் செல்லும்போது கூடவே வேணுகோபாலையும் அனுப்ப வேண்டும்.

இந்தப் பிரச்சினையில் அரசு அவசரப்பட்டு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்றுவிரும்புகிறோம். அக்டோபர் 11-ம் தேதி தடா கைதிகள் விடுதலை வழக்கில் சுப்ரீம் கோர்ட்தீர்ப்பு வழங்கவுள்ளது. அதுவரை பொறுமையாக இருத்தல் நல்லது என்றார் அவர்.

நான் செல்கிறேன் ... வீரப்பனின் கூட்டாளி மகன் கூறுகிறார்:

இதற்கிடையே, ராஜ்குமாரை விடுவிப்பது தொடர்பாக வீரப்பனிடம் தூது செல்ல தயாராகஇருப்பதாக வீரப்பனின் கூட்டாளி மாதையனின், மகன் மணி கூறியுள்ளார்.

ஏற்கனவே வீரப்பனிடம் சென்று அவரிடம் பிடிபட்டு, பின் மீண்டு வந்த வழக்கறிஞர் கிருஷ்ணசாமிஇதுகுறித்து சென்னையில் கூறுகையில், எனது ஜூனியர் மணி, வீரப்பனின் கூட்டாளி மாதையனின் மகன்ஆவார். அவர் காட்டுக்குச் சென்று ராஜ்குமாரை விடுவிப்பது தொடர்பாக வீரப்பனிடம் பேசமுன்வந்துள்ளார்.

இதுதொடர்பாக கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுக்குக் கடிதம் எழுதியுள்ளேன். கிருஷ்ணா அனுமதிகொடுத்தால் உடனடியாக மணி காட்டுக்குச் செல்வார். அவருடன் மேலும் சிலரும் செல்வர் என்றார்அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X