தமிழர்களை கொன்று குவித்தவருக்கு ஆஸி.தூதர் பதவி
சிட்னி:
இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதராக இலங்கை ராணுவ முன்னாள் துணை அதிகாரி ஜானகா பெரேராநியமிக்கப்பட்டதற்கு ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களும், மனித உரிமை கழங்களும் போர்க்கொடிதூக்கியுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்னர்தான் ஆஸ்திரேலியத் தூதராக பெரேரா நியமிக்கப்பட்டார் பெரேரா.
இதற்கு ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழ் மக்கள் மற்றும் ஆஸ்திரேயாவின் எதிர்க்கட்சியான தொழிலாளர்கட்சியினர் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி, மெல்போர்ன், கான்பெரா உள்பட பல நகரங்களில் வாழும் மக்கள் அனைவரும்கான்பெராவில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம் முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதே போல் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர், வெளியுறவுத்துறை அமைச்சர் அலெக்சாண்டர்டோனரிடம், ஆஸ்திரேலியாவிற்கான இலங்கைத் தூதராக, பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள இலங்கைராணுவ அதிகாரியை எப்படி நியமிக்கலாம் என்று கேள்வி எழுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.
எதற்காக இந்தப் போராட்டங்கள்? ஆர்ப்பாட்டங்கள்?
விஷயம் இதுதான்.
பெரேரா மேல் தமிழர்களுக்கு எதிரான பல குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளன. ஆயிரக்கணக்கான இலங்கைத்தமிழர்கள் சாவுக்கும், காணாமல் போனதற்கும் இவர்தான் காரணம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து, பிரிஸ்பேனில் வசித்து வரும் சிங்களர் பிரெய்ன் செனவர்த்தனே கூறுகையில், தற்போதுஆஸ்திரேலியாவிற்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் பெரேரா மேல் பல குற்றச்சாட்டுக்கள்உள்ளன.
மனித உரிமைகளை மீறியதாக, அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் இலங்கை அதிபர்சந்திரிகா குமாரதுங்காவின் உறவினர் என்பதால், இவருக்குத் தூதர் பதவி கிடைத்திருக்கலாம் என்றார்.
இலங்கையில் சில வருடங்களுக்கு முன்பு 600 முதல் 1000 வரையிலான அப்பாவித் தமிழ் மக்கள் ராணுவவீரர்களால் படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்த சர்வதேச மனித உரிமைகள் குழுவில்இவரும் இடம்பெற்றிருந்தார். இவரும் ஒரு ராணுவ அதிகாரியாக இருந்த காரணத்தால், இந்தப் படுகொலைகள்குறித்து அவர் அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.
யாழ்ப்பாணம் அருகேயுள்ள செம்மனி ராணுவ முகாமில் நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் ராணுவவீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது ராணுவ கமாண்டராக இருந்தவர் பெரேரா.
இதே போல் 1995-96களில், யாழ்ப்பாணத்தில் 600 அப்பாவித் தமிழர்கள் காணாமல் போனதற்கு பெரேராவேகாரணம் என்று கூறப்படுகிறது. 1980 ம் ஆண்டு நடந்த படுகொலைச் சம்பவங்களில் பல தமிழர்கள்கொல்லப்பட்டதற்கும் பெரேராவே காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இவர் கடந்த ஜனவரி மாதம் வரை இலங்கை ராணுவ துணை அதிகாரியாக இருந்தார். கடந்த சில மாதங்களுக்குமுன்தான், இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதராக நியமிக்கப்பட்டார்.
வரும் ஆகஸ்ட் மாதம் பிரிஸ்பேனில் நடைபெற உள்ள காமன்வெல்த் நாடுகளுக்கான கூட்டத்தில்ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்கள் சார்பில் பெரேரா நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும்திட்டமிடப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications