காஞ்சி சுவாமிகளின் திட்டத்தை ஏற்க முஸ்லீம் சட்ட வாரியம் மறுப்பு
டெல்லி:
அயோத்தியில் சர்ச்சைக்கு அப்பாற்பட்ட இடத்தில் வரும் 15ம் தேதி பூமி பூஜை நடத்தி ராமர் கோவில் கட்டப்படும்என்று காஞ்சிபுரம் மடத்தின் ஜெயேந்திர சுவாமிகள் அறிவித்துள்ள திட்டத்தை முஸ்லீம் சட்ட வாரியம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மறுத்துள்ளது.
ராமர் கோவில் பிரச்சனை தொடர்பாக கடந்த வாரம் 4 நாட்கள் டெல்லியில் முகாமிட்டு விஸ்வ ஹிந்து பரிஷத்(வி.எச்.பி.) மற்றும் முஸ்லீம் அமைப்பினருடன் ஜெயேந்திர சுவாமிகள் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் கடந்த வெள்ளியன்று சென்னை திரும்பிய ஜெயேந்திர சுவாமிகள், சர்ச்சைக்கு அப்பாற்பட்ட இடத்தில்வரும் 15ம் தேதி பூமி பூஜை நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில் முஸ்லீம் சட்ட வாரியத்தின் முக்கியக் கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. காஞ்சி சுவாமிகளின்இந்தத் திட்டத்தை மறுப்பதென இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
கடந்த 1989ல் வி.எச்.பி. எடுத்துள்ள முடிவுக்கும் தற்போது காஞ்சி சுவாமிகள் எடுத்துள்ள முடிவுக்கும் வித்தியாசம்எதுவும் இல்லை. எனவே அவருடைய முடிவை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்று முஸ்லீம் சட்ட வாரியம்தெரிவித்துள்ளது.
பாபர் மசூதி இருந்த இடத்தை விற்கவோ, அன்பளிப்பாகவோ கொடுக்க நாங்கள் எந்தவிதத்திலும் தயாராகஇல்லை. இது தொடர்பாகப் பேரம் பேசவும் நாங்கள் தயாராக இல்லை என்று பாபர் மசூதி இயக்கக் குழுவின்ஒருங்கிணைப்பாளர் சையது சகாபுதீன் கூறினார்.
இருப்பினும் இது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார் என்றும் சகாபுதீன் கூறினார்.
பூமி பூஜை கட்டாயம் நடக்கும்: வி.எச்.பி.
இதற்கிடையே எவ்வளவு தடைகள் வந்தாலும் வரும் 15ம் தேதி பூமி பூஜை நடந்தே தீரும் என்று வி.எச்.பியின்பொதுச் செயலாளர் பிரவீண் தொகாடியா கூறியுள்ளார்.
இந்த பூஜை விவகாரத்தில் தலையிடவும் இந்துக்களின் உரிமைகளைப் பறிக்கவும் யாருக்கும் எந்தவிதமானஉரிமையும் கிடையாது என்றும் தொகாடியா கூறினார்.