விருது வழங்கும் விழாவுக்கு வராத கல்வி அதிகாரிகள் - அமைச்சர் டோஸ்
நெல்லை: மாவட்டத்தின் சிறந்த பள்ளிக்கான விருது வழங்கும் விழாவில் பங்கேற்காத கல்வி துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மைதீன்கான் கடும் கண்டனம் தெரிவித்தார்.
2008-09ம் கல்வியாண்டில் நெல்லை மாவட்டத்தின் சிறந்த பள்ளியாக பாளை புறநகர் ஒன்றியத்தை சேர்ந்த கம்மாளன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் வின்சென்ட் பாஸ்கர் தலைமையில் நடப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கான அழைப்பிதழில் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் வசந்தா, உதவி தொடக்க கல்வி அதிகாரி (நர்சரி) ஜான்ராஜ் ஆகியோர் முன்னிலை வகிப்பர் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் குறிப்பிட்ட 3 அதிகாரிகளும் விழாவிற்கு வரவில்லை.
இதை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வியிடம் அமைச்சர் மைதீன்கான் அழைப்பிதழில் பெயர் போடும் முன் கல்வி அதிகாரிகளிடம் அனுமதி பெற்றேர்களா, என்று கேட்டார். அதற்கு அவர் அனுமதி பெற்றுதான் அழைப்பிதழில் பெயர் சேர்த்தோம் என்றார்.
பின்னர் சிறந்த பள்ளிக்கான விருதை வழங்கி அமைச்சர் மைதீன்கான் பேசுகையில், இங்கு அழைப்பிதழில் தலைமை, முன்னிலை, என பெயர் போடப்பட்ட கல்வி அதிகாரிகள் யாரும் விழாவுக்கு வரவில்லை. பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களது ஓப்புதல் பெற்ற பின்னரே பெயரை போட்டுள்ளார். அரசு அதிகாரிகள் பல சமயங்களில் கடமையை செய்ய தவறுகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அழைப்பிதழில் பெயர் போடும்முன் அதிகாரிகளின் ஓப்புதல் பெற வேண்டும். அதன்பின்னர் விழாவிற்கு அதிகாரிகள் வரவில்லை என்றால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். எங்களை மதிக்காவிட்டாலும் இங்குள்ள குழந்தைகளை மதித்தாவது விழாவுக்கு அதிகாரிகள் வந்திருக்கலாம்.
தமிழகத்தில் தற்போது பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 100 நடுநிலைப்பள்ளிகள உயர் நிலைப்பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளில் 600 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. ஏழை எளியவர்களின் குழந்தைகள் கல்வி அறிவு பெற தேவையான நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளும் என்றார்.
அமைச்சரின் கண்டிப்பான பேச்சால் பள்ளி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications