துணைவேந்தர் கொலை-வாலிபருக்கு 101 ஆண்டு சிறை
நாகர்கோவில்: துணைவேந்தர், அவரது மனைவி உட்பட மூன்று பேரை கொலை செய்த வழக்கில் வாலிபர் ஒருவருக்கு நாகர்கோவில் நீதிமன்றம் 101 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
நாகர்கோவில் பட்டகசாலியன் விலையில் வசித்து வந்தவர் மாலிக் முகமது. கோழிக்கோடு பல்கலை கழகத்தில் துணை வேந்தராக இருந்தவர் இவரது மனைவி கதிஜா பீவி.
கடந்த 2007 நவம்பர் 8ம் தேதி மாலிக் முகமதுவும், அவரது வீட்டு காவலாளி ஞானப்பிரகாசமும் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். 2 நாட்களுக்கு பிறகு விழுப்புரம் அருகே அவரது மனைவி கதிஜா பீவி எரித்துக் கொல்லப்பட்டு கிடந்தார்.
இது தொடர்பாக ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்த கோபி என்ற சகாய புருனே, நாகர்கோவில் மரவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த அன்பரசு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அன்பரசு ஏற்கனவே மாலிக் முகமது வீட்டில் 3 மாதமாக கார் டிரைவராக வேலை பார்த்தவர். இவரின் நடவடிக்கைகள் சரியி்ல்லாததால் மாலிக் முகமது வேலையை விட்டு நீ்க்கி விட்டார்.
தனது நண்பர் கோபியுடன் வீட்டுக்கு சென்ற அன்பரசு, மாலிக் முகமதுவையும், ஞானப்பிரகாசத்தையும் கொலை செய்தது உறுதியானது. மேலும், அவர்கள் மதுரையில் உள்ள மகளிடம் பணம் வாங்கி தருகிறேன் என்று கூறிய கதிஜா பீவியையும் விழுப்புரம் ஓல்கூர் அருகே எரித்து கொலை செய்ததும் தெளிவானது.
இவர்கள் இருவர் மீதும் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த கொலை வழக்கு விசாரணை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில் நடந்தது. 41 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். வழக்கு முடியும் நிலையில் ஜாமீனில் வெளியே போன அன்பரசு தலைமறைவாகிவிட்டார். தற்போது கோபி மட்டும் சிறையில் இருக்கிறார்.
எனவே கோபி மீதான வழக்கை மட்டும் நீதிபதி விசாரித்து தீர்ப்பு கூறினார். அதில் பல்வேரு பிரிவுகளிலும் சேர்த்து அவருக்கு மொத்தம் 101 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளார்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications