இடைத் தேர்தல்-களை கட்டியது திருச்செந்தூர்!
திருச்செந்தூர்: இடைத் தேர்தல் நடக்கும் திருச்செந்தூர் தொகுதியில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் ஒரே நாளில் பிரச்சாரம் செய்யவுள்ளனர்.
இந்தத் தொகுதியில் திமுக தென்மண்டல அமைப்புச் செயலாளரும் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி முகாமிட்டு தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து வரும் நிலையில் மு.க. ஸ்டாலின் டிசம்பர் 13, 14ம்தேதிகளில் பிரச்சாரம் செய்ய வருகிறார்.
அழகிரி தலைமையில் அமைச்சர்கள் நேரு, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமசந்திரன், ஐ.பெரியசாமி, சுரேஷ்ராஜன், கீதா ஜீவன், பூங்கோதை, மைதீன்கான், தமிழரசி, பெரியகருப்பன் என பெரிய குழுவே தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதே போல அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 12, 13ம் தேதிகளில் பிரச்சாரம் செய்கிறார்.
அதிமுக தரப்பில், தலைமை நிலைய செயலாளர் செங்கோட்டைய தலைமையில், முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார், ராஜகண்ணப்பன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் தொகுதியில் முகாமிட்டுள்ளனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் 12, 13, 14ம் தேதிகளிலும், அவரது மனைவி பிரேமலதா 15, 16ம் தேதிகளிலும்பிரச்சாரம் செய்கின்றனர்.
தேமுதிகவும் தனது மாநில துணை செயலாளர் ஆஸ்டின் தலைமையில் 27 மாவட்ட செயலாளர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளது.
13ம் தேதி ஸ்டாலின், ஜெயலலிதா, விஜயகாந்த் மூவரும் திருச்செந்தூர் தொகுதியில் பிரச்சாரம் செய்யவுள்ளதால் போலீசார் பதைபதைப்புடன் உள்ளனர்.
நாளை வைகோ பிரச்சாரம்:
இந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் நாராயணனை ஆதரித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நாளையும் மறுநாளும் பிரச்சாரம் செய்கிறார்.
அதே போல அதிமுக வேட்பாளரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வரதராஜன் 10ம் தேதி பிரச்சாரம் செய்கிறார்.
16 அதிமுகவினர் மீது வழக்கு:
வந்தவாசியில் வேட்புமனு தாக்கலின்போது, தேர்தல்விதிமுறைகளை மீறியதாக அதிமுக எம்பி தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் உள்ளிட்ட 16 அதிமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக வேட்பாளர் பி.முனுசாமி நவம்பர் 30ம் தேதிவேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன்தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழுத் தலைவர் தம்பிதுரை, பொன்னையன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தேர்தல் விதிமுறைகளின்படி வேட்பாளர் வேட்புமனுதாக்கல் செய்யும்போது, அவருடன் 4 பேர் மட்டுமே இருக்க வேண்டும். விதிமுறைகளை மீறி வட்டாட்சியர்அலுவலகத்துக்குள் 16 பேர் நுழைந்து மனு தாக்கல்செய்ததாகவும், அரசு அலுவலர்களை பணிசெய்ய விடாமல் தடுத்ததாகவும் உதவித் தேர்தல் அலுவலரும்வட்டாட்சியருமான எம்.நீலவேணி போலீஸில் புகார்அளித்தார்.
இதன்பேரில் தம்பிதுரை, பொன்னையன், பி.முனுசாமிஉள்ளிட்ட 16 அதிமுகவினர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
எனக்கு ரூல் தெரியாதா?-தம்பிதுரை:
இது குறித்து நிருபர்களிடம் தம்பிதுரை கூறியதாவது: திமுகவினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால்தான் எங்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். எங்களின் பணியை முடக்கவே இந்த வழக்கு. தேர்தல் விதிமுறை நாங்கள் மீறவில்லை. ஒரே நேரத்தில் மாற்று வேட்பாளர், சுயேட்சை வேட்பாளர் என உள்ளே அனுமதித்தனர். அது அதிகாரிகள் குற்றமே தவிர எங்கள் மீது தவறு இல்லை. தேர்தல் விதிமுறை பற்றி மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்த எனக்கு நன்கு தெரியும். தேர்தல் விதிமுறை அதிமுகமீறியது இல்லை.