எம்பிபிஎஸ்-நுழைவுத் தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு: தமிழக மாணவர்களுக்கு பாதி்ப்பு!

இதுகுறித்து நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையிலான பெஞ்ச் இன்று பிறப்பித்த உத்தரவில், பொது நுழைவுத் தேர்வுக்கான விதிமுறைகள், முறைப்பாடுகளை வகுக்க மத்திய அரசு உச்சநீதிமன்றத்தின் அனுமதிக்காக காத்திருக்கத் தேவையில்லை என்றும் தெரிவித்தனர்.
இந்த உத்தரவின் மூலம் நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு இனிமேல் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
தற்போது தமிழகத்தில் மருத்துவ, பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு இல்லை. அந்த முறையை தமிழக அரசு ரத்து செய்து விட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவால் தமிழக மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்புகள் வந்துள்ளன. குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பெரும் பாதிப்பையும், பாதகத்தையும் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ். படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவுக்கு ஏற்கனவே இந்திய மருத்துவக் கவுன்சில் வந்து விட்டது. ஆனால் தமிழக அரசு உள்பட பல்வேறு மாநிலங்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் கருத்தைக் கேட்டு மனு செய்தது இந்திய மருத்துவக் கவுன்சில்தான். அந்த வழக்கை விசாரித்துதான் தற்போது இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம்.
மத்திய செகண்டரி கல்வி வாரியத்துடன் இணைந்து 2011ம் ஆண்டு முதல் பொது நுழைவுத் தேர்வை அமல்படுத்துவது குறித்த ஆலோசனைகளை ஏற்கனவே மருத்துவக் கவுன்சில் தொடங்கி விட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது நாடு முழுவதும் 32,000 எம்.பி.பி.எஸ். மாணவர் இடங்களும், 13,000 முதுநிலை மருத்துவ இடங்களும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ளன. இதில் இளநிலைப் படிப்புகளுக்கு இனிமேல் பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications