வெங்காயம், தக்காளி விலை போட்டி போட்டு கடும் உயர்வு
பாவூர்சத்திரம்: நாட்டின் பிற பகுதிகளைப் போல நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்திலும் தக்காளி விலையும், வெங்காய விலையும் போட்டி போட்டுக் கொண்டு உயர்ந்து வருகின்றன. இங்கு ஒரே நாளில் தக்காளி விலை 2 மடங்கு உயர்நதது.
பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ ரூ.30க்கு விற்ற தக்காளி இன்று ஒரே நாளில் 2 மடங்கு அதிகரித்து ரூ.60 ஆக உயர்ந்துள்ளது.
பல்லாரி (பெரிய வெங்காயம்) கடந்த வாரம் ரூ.60ல் இருந்து ரூ.100க்கு விற்பனையானது. ஏற்றுமதி தடை காரணமாக படிப்படியாக விலை குறைந்து நேற்று ரூ.50க்கு விற்பனையானது. ஆனால் மீண்டும் ரூ.60 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல் கேரட் ரூ.30ல் இருந்து ரூ.48 ஆகவும், பீன்ஸ், அவரை ரூ.30லிருந்து ரூ.45 ஆகவும் விலை அதிகரித்துள்ளது. கிலோ ஓன்றுக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை விற்பனையாகும் தடியங்காய், பூசணி, சுரைக்காய், ஆகியவை ரூ.10 ஆகவும், புடலங்காய் ரூ.20, மல்லி இலை ரூ.40, முட்டைகோஸ் ரூ.20, வெண்டை ரூ.14 ஆகவும் விலை அதிகரித்துள்ளது.
வெங்காயம் ரூ.20ல் இருந்து ரூ.50வரை தரம் வரியாக விற்பனை செய்யப்படுகிறது.
பாவூர்சத்திரம் பகுதியில் மகசூல் இல்லாததாலும், மதுரையில் இருந்து காய்கறி வரத்து குறைவுகாரணமாகவும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும், புத்தாண்டு, பொங்கல் வரை விலை குறைய வாய்ப்பில்லை என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் இதே நிலைதான். முதலில் வெங்காயம் கடுமையான விலை உயர்வைக் கண்டது. பின்னர் இடையில் சற்று குறைந்து தற்போது மறுபடியும் உயர்ந்து வருகிறது. ஆனால் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்தவண்ணம் இருப்பதால் மக்கள் கடும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications