அரிமாவளவன் தலைமையில் 30 இயக்கங்கள் இணைந்து தேர்தலில் போட்டி
மதுரை: வரும் சட்டசபை தேர்தலில் தமிழர்களம் அரிமாவளவன் தலைமையில் தமிழர் தேசிய முன்னணி என்ற பெயரில் 30 இயக்கங்கள் ஒன்றிணைந்து போட்டியிட உள்ளன.
தமிழர் களம், மக்கள் மாநாடு கட்சி, தமிழக மக்கள் கட்சி, தமிழ் தன்னுரிமை இயக்கம், தமிழியம், தமிழாலயம், தமிழர் கழகம், மண்ணுரிமைக் களம், திருவள்ளுவர் பாரம்பரிய மீனவர் இயக்கம், மள்ளர் மீட்புக் களம், அகமுடையார் அரண், தேவர் இளைஞர் பேரவை, மறத்தமிழர் சேனை, அகில இந்தியப் பாரம்பரிய மீனவர் சங்கம், இந்திய மீனவர் இயக்கம் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட இயக்கங்கள் இணைந்து தமிழர் தேசிய முன்னணி என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அமைப்பின் கூட்டத்தில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழர் தேசிய முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக திரு. அரிமாவளவன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே போன்று, வழக்கறிஞர் சக்திவேல், பாவலர் செம்பியன், மகேஸ், கோபி நாராயணக் கோன், பறம்பை அறிவன், தாஸ் பாண்டியன், மை.பா. சேசுராஜ், பாவலர் ராமச்சந்திரன், முனைவர் அருகோபாலன், குருமூர்த்தி ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த கூட்டத்தில் திராவிட மற்றும் இந்திய தேசிய அரசியலால் வஞ்சிக்கப்பட்ட தமிழகத்தை மீட்டு தமிழ்நாட்டில் தமிழர் ஆட்சியை மீண்டும் மலர வைக்க முன்னணி பாடுபடும் என்றும், வந்தேறிகளின் கொட்டத்தை அகற்றி மண்ணின் மைந்தர்களின் உரிமைகளை நிலைநாட்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
வரும் சட்டசபை தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி தோல்வி என்ற கணக்குகளைக் கடந்து தமிழ்நாடு தமிழருக்கே என்ற தாரகச் சொற்களை நனவாக்க எடுக்கும் தொடக்க முயற்சி என்ற அளவில் தொய்வின்றி தொடர்ந்து இணைந்து முயல்வோம் என்று தீர்மானம் இயற்றப்பட்டது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications