தேர்தல்: பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியில் கல்லூரி மாணவர்கள்
மதுரை: தமிழகத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியாற்ற தேர்தல் ஆணையம் முதன்முறையாக கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவும் முடிவு செய்துள்ளது.
வரும் சட்டசபை தேர்தலை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
அதில் ஒன்றாக தற்போது தமிழகத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற தேர்தல் ஆணையம் முதன்முறையாக கல்லூரி மாணவர்களை அழைத்துள்ளது. அனைத்து பதற்றமான வாக்குச்சாவடிகளிலும் லேப்டாப்புடன் இணைந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இவற்றை இயக்க பி.இ., பி.எஸ்.சி. கம்யூட்டர் சயின்ஸ் படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்களை ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்த பணியில் மாணவிகள் ஈடுபடுத்தப்படமாட்டார்கள். இப்பணியில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இத்திட்டத்தை மதுரை மாவட்டத்தில் முழுமையாக செயல்படுத்தத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் மட்டும் 555 பதற்றமான வாக்குச்சாவடிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள 4 கல்லூரிகள் தங்களது மாணவர்களை இந்த பணியில் ஈடுபடுத்த பட்டியல் கொடுத்துள்ளன.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது,
லேப்டாப் கண்காணிப்பு கேமராவை இயக்க கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் அல்லது கல்லூரி மாணவர்களை பணியாற்ற தேர்வு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்த அடிப்படையில் தான் கல்லூரி மாணவர்களை தேர்வு செய்யும் பணி நடந்து கொண்டிருக்கிறது என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications