தேர்தல்: பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியில் கல்லூரி மாணவர்கள்
மதுரை: தமிழகத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியாற்ற தேர்தல் ஆணையம் முதன்முறையாக கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவும் முடிவு செய்துள்ளது.
வரும் சட்டசபை தேர்தலை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
அதில் ஒன்றாக தற்போது தமிழகத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற தேர்தல் ஆணையம் முதன்முறையாக கல்லூரி மாணவர்களை அழைத்துள்ளது. அனைத்து பதற்றமான வாக்குச்சாவடிகளிலும் லேப்டாப்புடன் இணைந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இவற்றை இயக்க பி.இ., பி.எஸ்.சி. கம்யூட்டர் சயின்ஸ் படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்களை ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்த பணியில் மாணவிகள் ஈடுபடுத்தப்படமாட்டார்கள். இப்பணியில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இத்திட்டத்தை மதுரை மாவட்டத்தில் முழுமையாக செயல்படுத்தத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் மட்டும் 555 பதற்றமான வாக்குச்சாவடிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள 4 கல்லூரிகள் தங்களது மாணவர்களை இந்த பணியில் ஈடுபடுத்த பட்டியல் கொடுத்துள்ளன.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது,
லேப்டாப் கண்காணிப்பு கேமராவை இயக்க கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் அல்லது கல்லூரி மாணவர்களை பணியாற்ற தேர்வு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்த அடிப்படையில் தான் கல்லூரி மாணவர்களை தேர்வு செய்யும் பணி நடந்து கொண்டிருக்கிறது என்றார்.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications