For Daily Alerts
Just In
வேட்புமனுக்களை நாளைக்குள் வாபஸ் பெறலாம்-1153 மனுக்கள் தள்ளுபடி
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பி வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள், வாபஸ் பெற விரும்பினால் அதை நாளைக்குள் செய்து முடிக்கலாம்.
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்தவர்களின் மனுக்கள் நேற்று பரிசீலிக்கப்பட்டன. மொத்தம் தாக்கலாகியிருந்த 4280 வேட்பு மனுக்களில் 1153 மனுக்கள் பல்வேறு காரணங்களுக்காக தள்ளுபடியாகின. இதில் முக்கியமானது தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி தங்கபாலுவின் மனுவாகும்.
முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், பாமக தலைவர் ஜி.கே.மணி, அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
மொத்தம் 1153 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. வேட்பு மனுக்களை வாபஸ் பெற விரும்புவோர் நாளைக்குள் அதைச் செய்யலாம்.
Comments
English summary
1153 nomination papers have been rejected. 4280 nominations were filed for TN assembly polls. They were taken for scrutiny yesterday. At the end of the day 1153 nominations were rejected for various reasons. Candidates can withdraw their nominations by tomorrow.
Story first published: Tuesday, March 29, 2011, 10:05 [IST]