டெல்லி விரைந்த இக்பால் சிங் ப.சிதம்பரத்துடன் சந்திப்பு
டெல்லி: டெல்லி விரைந்துள்ள புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இக்பால் சிங், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்துப் பேசினார். இதையடுத்து அவர் பதவி விலகுவார் என்ற செய்தி மேலும் உறுதியாகியுள்ளது.
கருப்புப் பண முதலை அசன் அலி விவகாரத்தில் சிக்கியுள்ளார் இக்பால் சிங். அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அப்போது எம்.பியாக இருந்த இக்பால் சிங் பரிந்துரைத்தது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அவரை விசாரிக்க அமலாக்கப் பிரிவு முடிவு செய்தது. இதற்கான அனுமதியை பிரதமர் அலுவலகம் வழங்கியது. இதையடுத்து புதுவை வந்து ஆளுநர் மாளிகையில் வைத்து இக்பால் சிங்கிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 3 முறை விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், நேற்று 6 பேர் கொண்ட மும்பை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஆளுநர் மாளிகைக்கு வந்து வீடியோ கான்பரன்சிங் வசதியை ஏற்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
விசாரணை முடிவடைந்த நிலையில் உடனடியாக நேற்று இரவே இக்பால் சிங் டெல்லி கிளம்பிப் போனார். இதனால் அவர் ராஜினாமா செய்யக் கூடும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் இன்று டெல்லியில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்துப் பேசினார் இக்பால் சிங்.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications