தி.நகர் கடைகளை பூட்டி 'சீல்' வைத்தால் சில்லரை வணிகம் சீர்குலைந்து விடும்- வெள்ளையன்
சென்னை: சில்லரை வணிகத்தில் அந்நியர்கள் கால்பதித்து விட்ட நிலையில் தி.நகர் சீல் வைப்பு நடவடிக்கை உள் நாட்டு சில்லரை வணிகத்தை நிலை குலையச் செய்து விடும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
31.10.2011 அன்று நீதிமன்றம் உத்தரவு அடிப்படையில் 100-க்கும் மேற்பட்ட கடைகளை பூட்டி சீல் வைத்திருக்கிறார்கள் அதிகாரிகள். கட்டிடங்கள் கட்டும் போதே அதிகாரிகள் கண்காணித்திருக்க வேண்டும். கட்டவிடாமல் தடுத்திருக்க வேண்டும். கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளுக்கு பிறகு நடவடிக்கை எடுப்பது நியாயமா?
இந்த நடவடிக்கை தொடர்ந்தால் சென்னை மாநகர் மட்டுமல்லாமல் தமிழகத்தின் அநேக முக்கிய நகரங்களில் இருக்கும் லட்சக்கணக்கான கட்டிடங்களைப் பூட்டி சீல் வைக்க வேண்டிய நிலை ஏற்படும்.
உள்நாட்டு சில்லரை வணிகத்திற்கு எல்லா விதத்திலும் தமிழக அரசு துணையாக நிற்க வேண்டும். தி.நகர் போன்ற வணிகத் தளங்களை ஒழுங்குபடுத்த வேண்டுமேயன்றி ஒழித்துக் கட்டிவிடக் கூடாது.
சில்லரை வணிகத்தில் அந்நியர்கள் கால்பதித்து விட்ட நிலையில் தி.நகர் சீல் வைப்பு நடவடிக்கை உள் நாட்டு சில்லரை வணிகத்தை நிலை குலையச் செய்து விடும் என்பது எமது பேரவையின் உறுதியான கருத்து. சட்டத்துக்காக மக்களா? மக்களுக்காக சட்டமா? என்கிற அடிப்படையில் முடிவெடுத்து இந்த பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காண வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார் அவர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications