சிங்கப்பூர்-சென்னை விமானத்தில் தன்னை கொல்ல முயன்றாக கணவர் மீது மனைவி புகார்
சென்னை: சிங்கப்பூரில் வசித்து வந்த சென்னையைச் சேர்ந்த தம்பதிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதால், இருவரும் விமானம் மூலம் சென்னை திரும்பினர். அப்போது தன்னை விமானத்தில் வைத்து கொலை செய்ய முயன்றதாக கணவர் மீது போலீசாரிடம் மனைவி புகார் தந்துள்ளார்.
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் ஸ்ரீகிருஷ்ணா (35) சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் மந்தைவெளியைச் சேர்ந்த சுவர்ணலதாவுக்கும் (27) ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இருவரும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்கள்.
திருமணத்துக்கு பின் இருவரும் சிங்கப்பூர் சென்றனர். ஆனால், இருவருக்கும் ஒத்துப் போகவில்லை. இதையடுத்து சென்னைக்கு சென்று பெற்றோருடன் கலந்து பேசி பிரச்சனையை தீர்த்துக் கொள்ள 3 வாரங்களுக்கு முன் சென்னை திரும்பினர்.
விமானத்திலேயே சுவர்ணலதாவை, கிருஷ்ணா தாக்கியதாகத் தெரிகிறது. விமானம் தரையிறங்கியதும் இது குறித்து சுவர்ணலதா தனது உறவினர்களிடம் கூற, அவர்கள் கிருஷ்ணாவை தட்டிக் கேட்க, கிருஷ்ணாவுக்கு ஆதரவாக அவரது தரப்பினர் வாக்குவாதம் செய்ய விமான நிலையத்திலேயே இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து விமான நிலைய போலீசார் கிருஷ்ணா, சுவர்ணலதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது சுவர்ணலதா, போலீசில் புகார் மனு தந்தார். அதில், விமானத்தில் வைத்து கிருஷ்ணா எனது கழுத்தை நெரித்து தாக்கினார். என்னை கொலை செய்ய முயன்றார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தப் புகார் குறித்து உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய விமான நிலைய போலீசார், வழக்கை பரங்கிமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றினர்.
அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜானகி, கணவன்-மனைவிடம் விசாரணை நடத்தியபோது, கிருஷ்ணாவுடன் என்னால் இனி வாழ முடியாது. திருமணத்தின் போது கொடுத்த நகைகள் மற்றும் சீர்வரிசை பொருட்கள், எனது சான்றிதழ்கள் ஆகியவற்றை கணவரிடமிருந்து வாங்கிக் கொடுங்கள் என்று சுவர்ணலதா கூறினார்.
இதையடுத்து சுவர்ணலதாவை விட்டுப் பிரிய கிருஷ்ணாவும் சம்மதித்தார். 1 வாரத்தில் பொருட்கள் அனைத்தையும் திருப்பிக் கொடுத்து விடுவதாக கிருஷ்ணா எழுதிக் கொடுத்தார்.
ஆனால் மீண்டும் சிங்கப்பூர் சென்றுவிட்ட கிருஷ்ணா, சொன்னபடி சுவர்ணலதாவின் பொருட்களை திருப்பித் தரவில்லை.
இதையடுத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சேலையூரில் வசித்து வரும் கிருஷ்ணாவின் பெற்றோரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது வரும் 14ம் தேதி சுவர்ணலதாவுக்கு சொந்தமான பொருட்கள் அனைத்தையும் திருப்பிக் கொடுத்து விடுகிறோம் என்று அவர்கள் எழுதித் தந்ததையடுத்து திருப்பி அனுப்பப்பட்டனர்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications