பிரமோத் மஜாகன் முறைகேடாக ஒதுக்கிய 2ஜி லைசென்ஸ்கள்-எப்ஐஆர் பதிவு செய்த அமலாக்கப் பிரிவு

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் மீது அமலாக்கப் பிரிவினர் அன்னிய செலாவணி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந் நிலையில், மத்தியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சிக் காலத்தில் நடந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் ஒதுக்கீடுகள் குறித்த விசாரணையையும் அமலாக்கப் பிரிவு தீவிரப்படுத்தியுள்ளது.
2001-03ம் ஆண்டு காலகட்டத்தில் பிரமோத் மகாஜன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் அள்ளித் தரப்பட்டது.
இதில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அமலாக்கப் பிரிவு, அப்போதைய தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் ஷியாம்லால் கோஷ், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை துணை டைரக்டர் ஜெனரல் ஜே.ஆர். குப்தா ஆகியோர் மீது அன்னிய செலாவணி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் (Prevention of Money Laundering Act-PMLA) எப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
அதே நேரத்தில் மகாஜன் மறைந்துவிட்டதால், அவரது பெயர் இதில் சேர்க்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications