இந்திய கடல் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு: மத்திய அமைச்சர் அந்தோணி பேட்டி
கொல்லம்: கேரள கடல்பகுதியில் 2 தமிழக மீனவர்கள் இத்தாலிய கப்பலின் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து இந்திய கடல் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கொல்லம் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் அஜீஸ் பிங்கோ, செலஸ்டின் வாலன்டைன் ஆகிய 2 பேர் அவ்வழியே சென்ற இத்தாலி நாட்டு எண்ணெய் கப்பலின் பாதுகாப்பு வீரர்கள் சால்வடோர் கிரோன், லதோரா மிசிமினியோனோ ஆகியோரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையாளிகளான இத்தாலி நாட்டு பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் நேற்று இத்தாலி அதிகாரிகள் மற்றும் கேரள காவல்துறை அதிகாரிகள் கொல்லம் வந்து தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற படகை ஆய்வு செய்தனர்.
மேலும் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி கொல்லத்தில் உள்ள மீனவர் செலஸ்டின வீட்டுக்கு சென்று அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களை சந்தித்த அவர், இந்திய கடல் பகுதியில் மீனவர்களை பாதுகாத்திட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications