ஐ.மு. கூட்டணியில் இணைய நிதிஷ்குமாரின் பேரம் ' பீகாருக்கு சிறப்பு' அந்தஸ்து?

பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. ஆனால் பாஜகவில் பெரும்பான்மையினர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதை நிதிஷ்குமார் விரும்பவில்லை. கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அண்மையில் மத்திய பட்ஜெட்டுக்கும் கூட நிதிஷ்குமார் பாராட்டு தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
டெல்லியில் 'திராணி'
இந்நிலையில் நரேந்திர மோடியை விட தமக்கு மக்கள் ஆதரவு, செல்வாக்கு அதிகம் உள்ளது என்று காட்டவும், ‘பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கோரி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தவும் நிதிஷ்குமார் டெல்லியில் ஏற்பாடு செய்து இருந்தார். ‘அதிகார்' என்ற இப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று நடந்தது.லட்சக்கணக்கான பீகார் மக்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் நிதிஷ்குமார் பேசுகையில்,
பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று பீகார் மாநில மக்கள் பிச்சை கேட்கவில்லை என்பதை மத்திய அரசு உணர வேண்டும். பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்று கேட்பது பீகார் மக்களின் கடமை.லட்சக்கணக்கான பீகார் மக்கள் தங்களின் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவையான வாழ்வாதார வசதிகள் தேடி பீகாரை விட்டு வெளியேறி வெளி மாநிலங்களுக்கு அகதிகள் போல் சென்று கொண்டிருக்கிறார்கள்.
குஜராத் மாயை
ஒரு மாநிலம் நல்ல வளர்ச்சி அடைந்து உள்ளது என்று கூறிக்கொள்கிறார்கள். அங்கு வளர்ச்சி ஏற்பட்டு இருப்பதாக ஒரு மாயையை, யானையைப் பிடிக்க ஒரு குழி தோண்டி இலை, தழைகளால் மூடப்பட்ட இருப்பது போல் பொய்யான ஒரு தோற்றத்தை காண்பித்து உள்ளனர். பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து அளித்து பாருங்கள், பின்னர் உண்மையான வளர்ச்சி, முன்னேற்றம் எந்த மாநிலத்தில் ஏற்பட்டு உள்ளது என்பதை பார்ப்பீர்கள்.
2014-ல் தெரியும்
பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து அளிப்பதில் மத்திய அரசு சாதகமான முடிவு எடுத்தாலும், பாதகமான முடிவு எடுத்தாலும் அது 2014 நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். அப்படி நீங்கள் இப்போது சிறப்பு மாநில அந்தஸ்து அளிக்கவில்லை என்றால், 2014 பார்லிமென்ட் தேர்தலுக்குப் பின்னர் நீங்கள் அளித்தே தீர வேண்டும். அதற்கான ஒரு சூழ்நிலை 2014 தேர்தலுக்குப் பின்னர் டெல்லியில் ஏற்பட்டே தீரும் என்றார் அவர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications