குஜராத் கட்ச் பகுதியில் லேசான நிலநடுக்கம்- ரிக்டரி 4.5 அலகுகள் பதிவு
Subscribe to Oneindia Tamil

குஜராத் மாநிலம் கட்ச் பூஜ் பகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு பேரழிவை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கானோர் இந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். அதன் பின்னர் ரிக்டர் அளவுகோலில் 2 முதல் 4 அலகுகள் வரையில் அவ்வப்போது அதிர்வுகள் உணரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று சோபுரி பகுதியில் பகல் 12.03 மணி அளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. இது 4.5 அலகுகளாக ரிக்டரில் பதிவாகி இருந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications