கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட 8 பேரின் தூக்கு தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட் 4 வாரம் தடை
டெல்லி: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட 8 தூக்கு தண்டனை கைதிகளின் தண்டனையை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் 4 வாரம் தடை விதித்துள்ளது.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 8 தூக்கு தண்டனை கைதிகளின் கருணை மனுக்களை கடந்த வாரம் நிராகரித்தார். இதையடுத்து எங்கே தங்களை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக தூக்கிலிட்டுவிடுவார்களோ என்று பயந்த அந்த 8 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு கடந்த சனிக்கிழமை மாலை நீதிபதி பி. சதாசிவத்தின் வீட்டில் வைத்து விசாரிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.ஒய், இக்பால் அடங்கிய பெஞ்ச் தண்டனையை நிறைவேற்ற 4 வார தடை விதித்துள்ளது. நீதிபதிகள் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் வழக்கு மாதிரி ஆகிவிடக்கூடாது(அப்சல் குரு தூக்கு). அவர் தூக்கிலிடப்பட்ட பிறகே அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை கடைசியாக சந்திக்கும் வாய்ப்பை அவரது உறவினர்கள் இழந்துவிட்டனர் என்றனர்.
தற்போது ஹரியானா முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகள் சோனியா, அவரது கணவர் சஞ்சீவ், சுரேஷ், ராம்ஜி, குர்மீத் சிங், சந்தர் சிங், ஜாபர் அலி, பிரவீன் குமார் ஆகியோரின் கருணை மனுக்கள் தான் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதில் சோனியாவும், சஞ்சீவும் தனது குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரை கடந்த 2001ம் ஆண்டு கொலை செய்துள்ளனர். குர்மீத் தனது குடும்பத்தார் 13 பேரை கொன்றுள்ளார். ஜாபர் தனது மனைவி மற்றும் 5 மகள்களை கொலை செய்துள்ளார். சுரேஷ், ராம்ஜி ஆகியோர் தங்கள் உறவினர் 5 பேரை கொன்றுள்ளனர், பிரவீன் குமார் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை கொலை செய்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications