நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு கோப்புகள் மாயமானது கவலைக்குரியது: சிபிஐ

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் விவகாரத்தை சிபிஐ உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சிபிஐக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் சிபிஐக்கு தேவையான ஆவணங்களைக் கொடுக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் திடீரென நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான கோப்புகள் காணாமல் போய்விட்டதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. கடந்த சனிக்கிழமையன்று கான்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஜெய்ஸ்வால், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான 1993, 2004ஆம் ஆண்டு கோப்புகள் காணாமல் போய்விட்டன. இந்தக் கோப்புகளை இதர அமைச்சகங்களிடம் இருந்து பெற முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
இது அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு கோப்புகள் மாயமானது தொடர்பாக கருத்து தெரிவித்த சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா, கோப்புகள் மாயமானது கவலைக்குரியது. இந்த வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணித்து வருகிறது. அடுத்த கட்ட விசாரணை வரும் 29-ந் தேதி நடைபெற உள்ளது. அப்போது நாங்கள் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்வோம். தற்போது கோப்புகள் காணாமல் போயிருக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றமே இறுதி முடிவெடுக்கும் என்றார்.
இதனிடையே கோப்புகள் எப்படி மாயமானது என்பது தொடர்பாக விசாரிக்க நிலக்கரி துறை அமைச்சக கூடுதல் செயலர் தலைமையிலான குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications