நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு கோப்புகள் மாயமானது கவலைக்குரியது: சிபிஐ

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் விவகாரத்தை சிபிஐ உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சிபிஐக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் சிபிஐக்கு தேவையான ஆவணங்களைக் கொடுக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் திடீரென நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான கோப்புகள் காணாமல் போய்விட்டதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. கடந்த சனிக்கிழமையன்று கான்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஜெய்ஸ்வால், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான 1993, 2004ஆம் ஆண்டு கோப்புகள் காணாமல் போய்விட்டன. இந்தக் கோப்புகளை இதர அமைச்சகங்களிடம் இருந்து பெற முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
இது அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு கோப்புகள் மாயமானது தொடர்பாக கருத்து தெரிவித்த சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா, கோப்புகள் மாயமானது கவலைக்குரியது. இந்த வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணித்து வருகிறது. அடுத்த கட்ட விசாரணை வரும் 29-ந் தேதி நடைபெற உள்ளது. அப்போது நாங்கள் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்வோம். தற்போது கோப்புகள் காணாமல் போயிருக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றமே இறுதி முடிவெடுக்கும் என்றார்.
இதனிடையே கோப்புகள் எப்படி மாயமானது என்பது தொடர்பாக விசாரிக்க நிலக்கரி துறை அமைச்சக கூடுதல் செயலர் தலைமையிலான குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications